கொரோனா தொற்று தடைகள் காரணமாக ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு குறைவான பக்தர்களே வருகை!

கோவை: கொரோனா தடைகள் அமாவாசையன்று ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைவாகவே காணப்பட்டது.



கோவை: கொரோனா தடைகள் அமாவாசையன்று ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைவாகவே காணப்பட்டது.

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை மாசாணி அம்மன் கோயிலுக்கு, உள்ளூர் மட்டுமின்றி தென் மாவட்டங்களில் இருந்தும், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும், ஏராளமான பக்தர்கள் வெள்ளிக்கிழமை மற்றும் அமாவாசையன்று அதிக அளவில் வருவது வழக்கம்.



இந்நிலையில், இந்த மாதத்திற்கான அமாவாசை பூஜைகள் நேற்று நடந்தது. வழக்கமாக ஆனைமலை மாசாணி அம்மன் கோயிலுக்கு அமாவாசை அன்று ஏராளமான பக்தர்கள் குவிவது வழக்கம். பக்தர்கள் வருகைக்காக அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.



ஆனால், கொரோனா தொற்று நோய் காரணமாக கடந்த சில மாதங்களாக அமாவாசை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் குறைவாகவே உள்ளது.



கொரோனா கட்டுப்பாட்டு விதிகள் இருப்பதால், அமாவாசைக்கு முந்திய நாள் இரவு கோயில் நடை மூடப்பட்டது. இந்த நிலையில், வழக்கம் போல் நேற்று காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை கோயில் நடை திறக்கப்பட்டு இருந்தது. கோவிலுக்கு வந்த பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து அம்மனை தரிசித்துச் சென்றனர்.

Newsletter

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...

அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் வினாடிக்கு 461 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம் 29.99 அடியாகவும் உள்ளது. அண...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பரம்பி...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (21.07.2026) நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...