முதுகுத் தண்டுவடம் காயமடைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ உபகரணங்கள்: நடவடிக்கைக் கோரி கோவை ஆட்சியரிடம் மனு!

கோவை: முதுகுத் தண்டுவடத்தில் காயமடைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு கிடைக்கப் பெற வேண்டிய மருத்துவ உபகரணங்கள் விரைவாக கிடைக்கப்பெற நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

கோவை: முதுகுத் தண்டுவடத்தில் காயமடைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு கிடைக்கப் பெற வேண்டிய மருத்துவ உபகரணங்கள் விரைவாக கிடைக்கப்பெற நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.



தண்டுவடப் பகுதியில் காயமடைந்த மாற்றுத்திறனாளிகள் கோவை மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்தனர். அதில், காயமடைந்த மாற்றுத்திறனாளிகள் எந்தப் பணிகளையும் மேற்கொள்ள முடியாமல் வேறொருவர் உதவியுடனே தங்களது தேவைகளைச் செய்ய முடிகிறது. இதனால் உடலளவிலும், பொருளாதார ரீதியாகவும் அவதிப்பட்டு வரும் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றித் தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதாக தெரிவித்தனர். 



இயற்கை உபாதைகள், சிறுநீர்த் தொற்று, படுக்கைப் புண் போன்றவற்றால் முதுகுத் தண்டுவட பாதிப்பு ஏற்பட்டவர்கள் அவதிப்பட்டு வருவதாகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவர் ஒருவரை நியமனம் செய்ய வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டனர். 

மேலும், தண்டுவடம் பாதித்தவருக்கு பாரா-குவாட் (Para-quad) திட்டத்தின்கீழ் வழங்கப்பட்டு வரும் அரசு உதவி தொகை மற்ற மாவட்டங்களில் கிடைக்கப்பெறும் நிலையில், கோவையில் உள்ள தண்டுவடம் பாதித்தோருக்கு கிடைக்கவில்லை என்று தெரிவித்தனர்.



இதைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரைச் சந்தித்த அவர்கள் கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கி, உடனடியாக தங்களது கோரிக்கைகளை பரிசீலனை செய்து நிறைவேற்றித்தர வேண்டுமென்று கேட்டுக்கொண்டனர்.

தண்டுவடத்தால் பாதிக்கப்பட்ட சந்தோஷ்குமார் என்பவர் கூறுகையில், கோவை மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட தண்டுவடம் பாதித்தவர்கள் உள்ளதாகவும் அரசு வழங்கும் மருத்துவ நிவாரணத்தொகை உடனடியாக கிடைக்கவேண்டும் எனவும் கூறிய அவர் ஆரம்ப சுகாதாரத்துறை மூலமே இவை வழங்கப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார். 

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...