முதுகுத் தண்டுவடம் காயமடைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ உபகரணங்கள்: நடவடிக்கைக் கோரி கோவை ஆட்சியரிடம் மனு!

கோவை: முதுகுத் தண்டுவடத்தில் காயமடைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு கிடைக்கப் பெற வேண்டிய மருத்துவ உபகரணங்கள் விரைவாக கிடைக்கப்பெற நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

கோவை: முதுகுத் தண்டுவடத்தில் காயமடைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு கிடைக்கப் பெற வேண்டிய மருத்துவ உபகரணங்கள் விரைவாக கிடைக்கப்பெற நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.



தண்டுவடப் பகுதியில் காயமடைந்த மாற்றுத்திறனாளிகள் கோவை மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்தனர். அதில், காயமடைந்த மாற்றுத்திறனாளிகள் எந்தப் பணிகளையும் மேற்கொள்ள முடியாமல் வேறொருவர் உதவியுடனே தங்களது தேவைகளைச் செய்ய முடிகிறது. இதனால் உடலளவிலும், பொருளாதார ரீதியாகவும் அவதிப்பட்டு வரும் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றித் தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதாக தெரிவித்தனர். 



இயற்கை உபாதைகள், சிறுநீர்த் தொற்று, படுக்கைப் புண் போன்றவற்றால் முதுகுத் தண்டுவட பாதிப்பு ஏற்பட்டவர்கள் அவதிப்பட்டு வருவதாகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவர் ஒருவரை நியமனம் செய்ய வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டனர். 

மேலும், தண்டுவடம் பாதித்தவருக்கு பாரா-குவாட் (Para-quad) திட்டத்தின்கீழ் வழங்கப்பட்டு வரும் அரசு உதவி தொகை மற்ற மாவட்டங்களில் கிடைக்கப்பெறும் நிலையில், கோவையில் உள்ள தண்டுவடம் பாதித்தோருக்கு கிடைக்கவில்லை என்று தெரிவித்தனர்.



இதைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரைச் சந்தித்த அவர்கள் கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கி, உடனடியாக தங்களது கோரிக்கைகளை பரிசீலனை செய்து நிறைவேற்றித்தர வேண்டுமென்று கேட்டுக்கொண்டனர்.

தண்டுவடத்தால் பாதிக்கப்பட்ட சந்தோஷ்குமார் என்பவர் கூறுகையில், கோவை மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட தண்டுவடம் பாதித்தவர்கள் உள்ளதாகவும் அரசு வழங்கும் மருத்துவ நிவாரணத்தொகை உடனடியாக கிடைக்கவேண்டும் எனவும் கூறிய அவர் ஆரம்ப சுகாதாரத்துறை மூலமே இவை வழங்கப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார். 

Newsletter

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...

அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் வினாடிக்கு 461 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம் 29.99 அடியாகவும் உள்ளது. அண...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பரம்பி...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (21.07.2026) நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...