ஸ்மார்ட்‌ சிட்டி திட்டத்தின்‌ கீழ்‌ கோவை‌ மாநகராட்சியில் நடைபெறும் வளர்ச்சிப்பணிகளை விரைந்து முடிக்க மாநகராட்சி ஆணையாளர் அறிவுறுத்தல்!

கோவை: ஸ்மார்ட்‌ சிட்டி திட்டத்தின்‌ கீழ்‌ கோவை‌ மாநகராட்சியில் நடைபெற்றுவரும் வளர்ச்சிப்பணிகள் அனைத்தையும் விரைந்து முடிக்குமாறு அனைத்துதுறை அலுவலர்கள் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் கேட்டுக்கொண்டார்.

கோவை: ஸ்மார்ட்‌ சிட்டி திட்டத்தின்‌ கீழ்‌ கோவை‌ மாநகராட்சியில் நடைபெற்றுவரும் வளர்ச்சிப்பணிகள் அனைத்தையும் விரைந்து முடிக்குமாறு அனைத்துதுறை அலுவலர்கள் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் கேட்டுக்கொண்டார்.



கோவை மாநகராட்சியில்‌ ஸ்மார்ட்‌ சிட்டி திட்டத்தின்‌ கீழ்‌ நடைபெற்று வரும்‌ பணிகள்‌ குறித்து அனைத்துதுறைசார்ந்த அலுவலர்களுடனான ஆய்வுக்‌ கூட்டம்‌ மாநகராட்சி ஆணையாளர் மற்றும்‌ தனிஅலுவலர்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ தலைமையில்‌ இன்று (14.12.2020) நடைபெற்றது. மாநகராட்சி பிரதான அலுவலகக்‌ கூட்டரங்கில்‌ நடைபெற்ற இந்தக் கூட்டத்தில்‌ சாலைகள்‌, பூங்காக்கள்‌, பாதாள சாக்கடைப் பணிகள்‌, குடிமராமத்துப் பணிகள் குறித்து பேசப்பட்டன.‌ 

ஸ்மார்ட்‌ சிட்டி திட்டத்தின்‌ கீழ்‌ கோயம்புத்தூர்‌ மாநகராட்சியில்‌ அதிநவீன சாலைகள்‌, பொழுதுபோக்கு பூங்காக்கள்‌, சிறுவர் பூங்காக்கள்‌, விளையாட்டுத்திடல்‌, தெருவிளக்குகள்‌, சாலையோர நடைபாதைகள்‌, மாதிரி சாலைகள்‌, மல்டி லெவல்‌ கார்‌ பார்க்கிங்‌ ஆகிய பணிகள்‌ நடைபெற்று வருகின்றன. மேலும் இத்திட்டத்தின்கீழ் கோவை‌ மாநகரின்‌ மையப்பகுதியில்‌ உள்ள உக்கடம்‌ பெரியகுளம்‌, வாலாங்குளம்‌, முத்தண்ணன்‌குளம்‌ போன்ற பல்வேறு குளங்கள்‌ புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. 

மாதிரி சாலைகள்‌அமைக்கப்பட்டு மின்சாரம்‌ மற்றும்‌ தொலைத்தொடா்பு வசதிகள்‌ போன்ற அனைத்து பயன்பாடுகளும்‌ நிலத்தடியில்‌ செல்லும்‌ வண்ணம்‌ வடிவமைக்கப்படுகிறது. நடைபாதை ஓரங்களில்‌ நவீன மின்விளக்கு வசதிகள்‌ செய்யப்படுகின்றன. உக்கடம்‌ பெரியகுளம்‌, வாலாங்குளம்‌, செல்வசிந்தாமணிக்‌ குளம்‌, கிருஷ்ணம்பதி குளம்‌, செல்வம்பதி, குமாரசாமி குளம்‌, சிங்காநல்லூர்‌ குளம்‌, குறிச்சி குளம்‌ ஆகிய குளங்களில்‌ பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.‌ கோவை மாநகராட்சியில்‌ 24 மணிநேரமும் குடிநீர் வழங்கும்‌ பணிகள் மற்றும் மல்டி லெவல்‌ கார்‌ பார்க்கிங்‌ கட்டப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகள் அனைத்தையும் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனிஅலுவலர்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ அனைத்துப்‌ பணிகளையும் தொய்வின்றி விரைந்து முடிக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம்‌ கேட்டுக்கொண்டார்‌.

கூட்டத்தில்‌ ஸ்மார்ட்‌ சிட்டி முதன்மை செயல்‌ அலுவலர்‌ மருத்துவர் என்‌.ராஜ்குமார், மாநகரப் பொறியாளர்‌ ஆ.லட்சுமணன்‌, செயற்பொறியாளர் பார்வதி, திட்ட மேலாண்மை ஆலோசகர் குழுத்தலைவர் ‌கோபாலகிருஷ்ணன்‌, அனைத்து மண்டல செயற்பொறியாளர்கள்‌, உதவி பொறியாளர்கள்‌ கலந்து கொண்டனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...