வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி கோவையில் ரயில் மறியல்: மனிதநேய மக்கள் கட்சியினர் - போலீஸ் தள்ளுமுள்ளு!

கோவை: வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி கோவையில் மனிதநேய மக்கள் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது அவர்களுக்கும் போலீசாருக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

கோவை: வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி கோவையில் மனிதநேய மக்கள் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது அவர்களுக்கும் போலீசாருக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.



மத்திய அரசு சமீப காலத்தில் கொண்டு வந்த வேளாண்திருத்த சட்ட மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு நாடு முழுவதும் பல்வேறு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.



இந்நிலையில்,விவசாயிகளின் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கோவையிலும் பல்வேறு கட்சியினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, மனிதநேய மக்கள் கட்சியினர் கோவை ரயில் நிலையம் முன்பு ரயில் நிலைய முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இதனிடையே, ரயில் நிலையத்தில் உள்ளே முயன்றவர்களை போலீசார் தடுத்த நிறுத்த முயன்ற போது கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 78 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாக அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...