கோவை: வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி கோவையில் மனிதநேய மக்கள் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது அவர்களுக்கும் போலீசாருக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
கோவை: வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி கோவையில் மனிதநேய மக்கள் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது அவர்களுக்கும் போலீசாருக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

மத்திய அரசு சமீப காலத்தில் கொண்டு வந்த வேளாண்திருத்த சட்ட மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு நாடு முழுவதும் பல்வேறு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில்,விவசாயிகளின் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கோவையிலும் பல்வேறு கட்சியினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, மனிதநேய மக்கள் கட்சியினர் கோவை ரயில் நிலையம் முன்பு ரயில் நிலைய முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே, ரயில் நிலையத்தில் உள்ளே முயன்றவர்களை போலீசார் தடுத்த நிறுத்த முயன்ற போது கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 78 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாக அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

மத்திய அரசு சமீப காலத்தில் கொண்டு வந்த வேளாண்திருத்த சட்ட மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு நாடு முழுவதும் பல்வேறு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில்,விவசாயிகளின் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கோவையிலும் பல்வேறு கட்சியினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, மனிதநேய மக்கள் கட்சியினர் கோவை ரயில் நிலையம் முன்பு ரயில் நிலைய முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே, ரயில் நிலையத்தில் உள்ளே முயன்றவர்களை போலீசார் தடுத்த நிறுத்த முயன்ற போது கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 78 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாக அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.