ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் மற்றும் மகனை யானை தாக்கிக் கொன்றதால் பந்தலூரில் இன்று முழு அடைப்புப் போராட்டம்..!

கூடலூர்: நீலகிரி மாவட்டம் பந்தலூர் அடுத்துள்ள கொளப்பள்ளி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஊராட்சி ஒன்றிய கவுன்சிலரையும், அவரது மகனையும் யானை தாக்கிக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கூடலூர்: நீலகிரி மாவட்டம் பந்தலூர் அடுத்துள்ள கொளப்பள்ளி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஊராட்சி ஒன்றிய கவுன்சிலரையும், அவரது மகனையும் யானை தாக்கிக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 



இச்சம்பவத்தை, கண்டித்து இன்று பந்தலூர் தாலுகாவிற்குட்பட்ட ஊர்களில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெறுவதால், அங்கு கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டுள்ளது. 



கொளப்பள்ளி அரசு தேயிலைத் தேரட்டக் கழக முதல் சரகத்தைச் சேர்ந்த ஆனந்தராஜ் (49), அவரது மகன் பிரசாந்த் (21) இருவரும் நேற்று நகரத்திற்கு வந்து பணிகளை முடத்துவிட்டு வீட்டுக்குச் செல்லும் வழியில் இருவரையும் யானை தாக்கிக் கென்றது. அதே பகுதியில், கடந்த 3 நாட்களில் மூன்று பேர் யானைத் தாக்குதலில் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த ஆட்கொல்லி யானையை பிடித்து, வளர்ப்பு முகாமுக்கு கொண்டு செல்ல வலியுறுத்தி முழு அடைப்புப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெறும் முழு அடைப்பு போராட்டதிற்கு, அரசு தேயிலைத் தோட்டக் கழக தொழிலாளர்களும் முழு ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர். நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலைக்கு செல்லாமல், இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இறந்த, ஆனந்தராஜ் அந்த பகுதி, ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராக திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...