கூடலூர்: நீலகிரி மாவட்டம் பந்தலூர் அடுத்துள்ள கொளப்பள்ளி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஊராட்சி ஒன்றிய கவுன்சிலரையும், அவரது மகனையும் யானை தாக்கிக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கூடலூர்: நீலகிரி மாவட்டம் பந்தலூர் அடுத்துள்ள கொளப்பள்ளி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஊராட்சி ஒன்றிய கவுன்சிலரையும், அவரது மகனையும் யானை தாக்கிக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவத்தை, கண்டித்து இன்று பந்தலூர் தாலுகாவிற்குட்பட்ட ஊர்களில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெறுவதால், அங்கு கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டுள்ளது.

கொளப்பள்ளி அரசு தேயிலைத் தேரட்டக் கழக முதல் சரகத்தைச் சேர்ந்த ஆனந்தராஜ் (49), அவரது மகன் பிரசாந்த் (21) இருவரும் நேற்று நகரத்திற்கு வந்து பணிகளை முடத்துவிட்டு வீட்டுக்குச் செல்லும் வழியில் இருவரையும் யானை தாக்கிக் கென்றது. அதே பகுதியில், கடந்த 3 நாட்களில் மூன்று பேர் யானைத் தாக்குதலில் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த ஆட்கொல்லி யானையை பிடித்து, வளர்ப்பு முகாமுக்கு கொண்டு செல்ல வலியுறுத்தி முழு அடைப்புப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெறும் முழு அடைப்பு போராட்டதிற்கு, அரசு தேயிலைத் தோட்டக் கழக தொழிலாளர்களும் முழு ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர். நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலைக்கு செல்லாமல், இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இறந்த, ஆனந்தராஜ் அந்த பகுதி, ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராக திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவத்தை, கண்டித்து இன்று பந்தலூர் தாலுகாவிற்குட்பட்ட ஊர்களில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெறுவதால், அங்கு கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டுள்ளது.

கொளப்பள்ளி அரசு தேயிலைத் தேரட்டக் கழக முதல் சரகத்தைச் சேர்ந்த ஆனந்தராஜ் (49), அவரது மகன் பிரசாந்த் (21) இருவரும் நேற்று நகரத்திற்கு வந்து பணிகளை முடத்துவிட்டு வீட்டுக்குச் செல்லும் வழியில் இருவரையும் யானை தாக்கிக் கென்றது. அதே பகுதியில், கடந்த 3 நாட்களில் மூன்று பேர் யானைத் தாக்குதலில் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த ஆட்கொல்லி யானையை பிடித்து, வளர்ப்பு முகாமுக்கு கொண்டு செல்ல வலியுறுத்தி முழு அடைப்புப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெறும் முழு அடைப்பு போராட்டதிற்கு, அரசு தேயிலைத் தோட்டக் கழக தொழிலாளர்களும் முழு ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர். நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலைக்கு செல்லாமல், இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இறந்த, ஆனந்தராஜ் அந்த பகுதி, ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராக திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.