கோவை: கோவையில் வாலிபர் ஒருவர், ரெயில் என்ஜினில் சிக்கி 3 கிலோ மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்ட வாலிபர் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவையில் வாலிபர் ஒருவர், ரெயில் என்ஜினில் சிக்கி 3 கிலோ மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்ட வாலிபர் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கவுகாத்தியில் இருந்து கோவை வழியாக திருவனந்தபுரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று மதியம் 12 மணி அளவில சிங்காநல்லூர் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது, நீலிகோணம்பாளையம் பக்கம் வரும்போது, ஒரு வாலிபர் ரயில் என்ஜினில் முன்பகுதியில் சிக்கினார். மோதிய வேகத்தில் பலியான அந்த வாலிபரின் வாய் பகுதியில் எஞ்சினின் முன்பு உள்ள கம்பி குத்தி இழுத்து செல்லப்பட்டார்.
அதை நேரில் பார்த்த மக்கள், அலறி சத்தம் போட்டனர். இதனால், ராமானுஜம் நகர் அருகே நடுவழியில் ரெயில் நிறுத்தப்பட்டது. இது குறித்து, கோவை ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், சப்-இன்ஸ்பெக்டர் ஏசு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று என்ஜின் கம்பியில் சிக்கி இருந்த அந்த வாலிபர் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தார்.
இதனால், அரை மணி நேரம் தாமதமாக ரெயில் புறப்பட்டு சென்றது. பலியான அந்த வாலிபருக்கு 25 வயது இருக்கும், மாநிறம் உடையவர் சிமெண்ட் கலரில் கருப்பு புள்ளி போட்ட முழுக்கை சட்டையும், நீல கலரில் பேண்டும் அணிந்து உள்ளார்.
இறந்த அந்த வாலிபர் யார்? தண்டவாளத்தைக் கடக்கும்போது ரெயலில் அடிபட்டு இறந்தாரா?அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.