கோவையில் மைனர் பெண்ணை கடத்தி திருமணம் நாடகம் ஆடிய காதலனின் தாய்-தந்தை போக்சோவில் கைது

கோவை: கோவை வெள்ளலூர் பகுதியைச் சேர்ந்த 17 வயதான கல்லூரி மாணவியை, ஆசை காட்டி திருமணம் செய்த வாலிபரை போலீஸார் தேடி வருகின்றனர். 18 வயதுக்கு கீழ் உள்ள பெண்ணை திருமணம் செய்த குற்றத்துக்காக, அந்த வாலிபர் மீதும், அப்பெண்ணை வீட்டில் மறைத்து வைத்து நாடகம் ஆடிய குற்றத்திற்காக அவரது பெற்றோரை மீது, போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கோவை: கோவை வெள்ளலூர் பகுதியைச் சேர்ந்த 17 வயதான கல்லூரி மாணவியை, ஆசை காட்டி திருமணம் செய்த வாலிபரை போலீஸார் தேடி வருகின்றனர். 18 வயதுக்கு கீழ் உள்ள பெண்ணை திருமணம் செய்த குற்றத்துக்காக, அந்த வாலிபர் மீதும், அப்பெண்ணை வீட்டில் மறைத்து வைத்து நாடகம் ஆடிய குற்றத்திற்காக அவரது பெற்றோரை மீது, போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

வெள்ளலூர் பகுதியை சேர்ந்த 17 வயதுடைய கல்லூரி மாணவிக்கும், பீளமேடு புதூர் பகுதியைச் சேர்ந்த சி.என்.சி ஆப்பரேட்டர் சரவணன் (23), என்பவருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. நாளடைவில், மாணவியிடம் செல்போன் எண் வாங்கி சரவணன் அடிக்கடி பேசி வந்துள்ளார். கொரோனா ஊரடங்கின் போது, சரவணன், அந்த மாணவியிடம் தான் அவரை காதலிப்பதாகவும், மேலும் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். 

இந்த நிலையில், கடந்த அக்டோபர் மாதம் யாருக்கும் தெரியாமல், சரவணன், அந்த மாணவியை மதுரைக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்துள்ளார். பின்னர், இருவரும் பீளமேடு புதூரில் உள்ள சரவணனின் வீட்டில் வாழ்ந்து வந்துள்ளனர். 

இந்த நிலையில், மகளை காணாமல் தவித்த பெற்றோர், போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வந்தனர். விசாரணையில், சமீபத்தில் தான் மாணவிக்கு திருமணமாகி, பீளமேடு புதூரில் வசிப்பதாக தெரிய வந்துள்ளது. பின்னர், இந்த வழக்கு கோவை கிழக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. 

விசாரணைக்காக, சரவணனின் வீட்டிற்குச் சென்ற போது, சரவணனின் தாய், தந்தை ஆகியோர் மாணவியை வீட்டுக்குள் மறைத்து வைத்துக்கொண்டு, வீட்டில் யாரும் இல்லை, எங்கள் மகனுக்கு திருமணம் நடக்கவில்லை என கூறி நாடகமாடியது தெரியவந்துள்ளது. 

அவர்கள் பேச்சில், சந்தேகம் அடைந்த போலீசார், வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, மாணவியை அறைக்குள் வைத்து பூட்டி வைத்திருந்தது தெரியவந்தது. பின்னர், மாணவியை மீட்டு பெற்றோர் வசம் ஒப்படைத்தனர். 

திருமணத்தை மறைத்து, மாணவியை வீட்டில் மறைத்து வைத்திருந்த சரவணன், மற்றும் அவரது தந்தை, சுப்பிரமணியம் (55), தாய் பொன்னி (48), ஆகியோர் 

மீது (சிறார் பாலியல் அத்துமீறல்) போக்சோ சட்டம் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள சரவணனை போலீசார் தேடி வருகின்றனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...