கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியம் தேவராயபுரம் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் சுந்தரி. இவர், தாழ்த்தப்பட்ட காட்டுநாயக்கர் என்று சொல்லப்படும் சாமக்கோடாங்கி சமுதாயத்தைச் சேர்ந்தவர்.
கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியம் தேவராயபுரம் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் சுந்தரி. இவர், தாழ்த்தப்பட்ட காட்டுநாயக்கர் என்று சொல்லப்படும் சாமக்கோடாங்கி சமுதாயத்தைச் சேர்ந்தவர்.

அண்மையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில், தேவராயபுரம் ஊராட்சியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு அவர் வெற்றி பெற்று ஊராட்சி தலைவர் ஆனார். இவருக்கு, இந்த ஊராட்சியில் துணைத் தலைவராக உள்ள அதிமுகவைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் வேலையில்
ஒத்துழைப்புதராமல், ஜாதி ரீதியான இழிவுப்படுத்தி வருவதாகவும் குற்றம் தெரிவித்துள்ளார். மேலும், நான் சொல்வதை தான் கேட்க வேண்டும் என்று தன்னை மிரட்டி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனால், வேதனையடைந்த ஊராட்சி மன்ற தலைவர், சுந்தரி இது குறித்து கட்சி நிர்வாகிகளிடம் பலமுறை புகார் செய்தும், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று நிருபர்களை சந்தித்த ஊராட்சி மன்றத்தலைவர் சுந்தரி கூறுகையில்:- கோவை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து துணைத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி மனு கொடுத்துள்ளேன். என் மனு மீதுு, நடவடிக்கை எடுக்காவிட்டால் எனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளேன் என கண்ணீர் மல்க கூறினார்.
ஊராட்சி தலைவரான, சுந்தரி ராஜினாமா செய்ய உள்ளதாக வெளிவந்த செய்தி, அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.