கோவையில் தன்னை ஜாதியைக் கூறி இழிவு செய்ததாக அ.தி.மு.க பெண் ஊராட்சி தலைவர் பரபரப்பு புகார்

கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியம் தேவராயபுரம் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் சுந்தரி. இவர், தாழ்த்தப்பட்ட காட்டுநாயக்கர் என்று சொல்லப்படும் சாமக்கோடாங்கி சமுதாயத்தைச் சேர்ந்தவர்.



கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியம் தேவராயபுரம் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் சுந்தரி. இவர், தாழ்த்தப்பட்ட காட்டுநாயக்கர் என்று சொல்லப்படும் சாமக்கோடாங்கி சமுதாயத்தைச் சேர்ந்தவர்.



அண்மையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில், தேவராயபுரம் ஊராட்சியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு அவர் வெற்றி பெற்று ஊராட்சி தலைவர் ஆனார். இவருக்கு, இந்த ஊராட்சியில் துணைத் தலைவராக உள்ள அதிமுகவைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் வேலையில்

ஒத்துழைப்புதராமல், ஜாதி ரீதியான இழிவுப்படுத்தி வருவதாகவும் குற்றம் தெரிவித்துள்ளார். மேலும், நான் சொல்வதை தான் கேட்க வேண்டும் என்று தன்னை மிரட்டி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனால், வேதனையடைந்த ஊராட்சி மன்ற தலைவர், சுந்தரி இது குறித்து கட்சி நிர்வாகிகளிடம் பலமுறை புகார் செய்தும், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று நிருபர்களை சந்தித்த ஊராட்சி மன்றத்தலைவர் சுந்தரி கூறுகையில்:- கோவை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து துணைத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி மனு கொடுத்துள்ளேன். என் மனு மீதுு, நடவடிக்கை எடுக்காவிட்டால் எனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளேன் என கண்ணீர் மல்க கூறினார்.

ஊராட்சி தலைவரான, சுந்தரி ராஜினாமா செய்ய உள்ளதாக வெளிவந்த செய்தி, அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...