கோவை அருகே மது போதையில் இருந்த நபர் மீது வாகனம் மோதி உயிரிழப்பு..!

கோவை: கோவை கண்ணம்பாளையம் பகுதியில் கூலித்தொழிலாளி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


கோவை: கோவை கண்ணம்பாளையம் பகுதியில் கூலித்தொழிலாளி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சூலூரை அடுத்த கண்ணம்பாளையம் பிரிவு அருகே நேற்று 55, வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக சூலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர். இதில், சடலமாக கிடந்த அவர் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகம் 55 என்பதும் இவர் கட்டிட வேலைக்கு சென்று வந்ததும் தெரியவந்தது.

விசாரணையில் நேற்று முன்தினம், ஆறுமுகம் அவரது நண்பர்களுடன் சேர்ந்து அதே பகுதியில் மது அருந்தியதாகவும், மது போதையில் நண்பர்கள் அவரை அங்கேயே விட்டுவிட்டு சென்றுள்ளனர். அப்போது, அந்த பகுதியில் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அவர் இறந்தது தெரியவந்தது.

இது தொடர்பாக, சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து சூலூர் போலீசார், விசாரணை நடத்தியதில் வாகனம் மோதியது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அவரது இறப்பு, விபத்து என வழக்கு பதிவு செய்த போலீசார் மேற்படி உயிர் இழப்பு ஏற்படுத்திய வாகனம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...