கோவை: கோவை கண்ணம்பாளையம் பகுதியில் கூலித்தொழிலாளி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை: கோவை கண்ணம்பாளையம் பகுதியில் கூலித்தொழிலாளி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சூலூரை அடுத்த கண்ணம்பாளையம் பிரிவு அருகே நேற்று 55, வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக சூலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர். இதில், சடலமாக கிடந்த அவர் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகம் 55 என்பதும் இவர் கட்டிட வேலைக்கு சென்று வந்ததும் தெரியவந்தது.
விசாரணையில் நேற்று முன்தினம், ஆறுமுகம் அவரது நண்பர்களுடன் சேர்ந்து அதே பகுதியில் மது அருந்தியதாகவும், மது போதையில் நண்பர்கள் அவரை அங்கேயே விட்டுவிட்டு சென்றுள்ளனர். அப்போது, அந்த பகுதியில் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அவர் இறந்தது தெரியவந்தது.
இது தொடர்பாக, சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து சூலூர் போலீசார், விசாரணை நடத்தியதில் வாகனம் மோதியது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அவரது இறப்பு, விபத்து என வழக்கு பதிவு செய்த போலீசார் மேற்படி உயிர் இழப்பு ஏற்படுத்திய வாகனம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூலூரை அடுத்த கண்ணம்பாளையம் பிரிவு அருகே நேற்று 55, வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக சூலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர். இதில், சடலமாக கிடந்த அவர் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகம் 55 என்பதும் இவர் கட்டிட வேலைக்கு சென்று வந்ததும் தெரியவந்தது.
விசாரணையில் நேற்று முன்தினம், ஆறுமுகம் அவரது நண்பர்களுடன் சேர்ந்து அதே பகுதியில் மது அருந்தியதாகவும், மது போதையில் நண்பர்கள் அவரை அங்கேயே விட்டுவிட்டு சென்றுள்ளனர். அப்போது, அந்த பகுதியில் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அவர் இறந்தது தெரியவந்தது.
இது தொடர்பாக, சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து சூலூர் போலீசார், விசாரணை நடத்தியதில் வாகனம் மோதியது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அவரது இறப்பு, விபத்து என வழக்கு பதிவு செய்த போலீசார் மேற்படி உயிர் இழப்பு ஏற்படுத்திய வாகனம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.