கொரோனா தொற்று விதிமுறைகளை பின்பற்றி, கோவையில் நடைபெற்ற தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு..!

கோவை: கோவை மாவட்ட காவல்துறை சார்பில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு ஆணையத்திற்கான, இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர், மற்றும் தீயணைப்புபடை வீரர்களுக்கான எழுத்துத் தேர்வு இன்று கோவை ஜி.என்.மில்ஸ் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.

கோவை: கோவை மாவட்ட காவல்துறை சார்பில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு ஆணையத்திற்கான, இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர், மற்றும் தீயணைப்புபடை வீரர்களுக்கான எழுத்துத் தேர்வு இன்று கோவை ஜி.என்.மில்ஸ் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.



கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஜய கார்த்திக்ராஜ் தலைமையிலான, 130 காவலர்கள் பாதுகாப்புப் பணியினை மேற்கொண்டனர். தேர்வுக்கு வருபவர்களிடம் நுழைவுச்சீட்டு மற்றும் அடையாள அட்டை பரிசோதித்த, பின்னரே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வு எழுத உள்ளே செல்பவர்கள் கைபேசி ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட எதையும் உள்ளே எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. 



கொரோனா தொற்று காரணமாக, தேர்வுக்கு வரும் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்து வந்துளனரா என்று அதிகாரிகள் சரிபார்த்து அனுமதித்தனர். மேலும், அனைவருக்கும் கைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, காய்ச்சல் உள்ளதா? என்று பரிசோதனை செய்யப்பட்டது.

சுமார் 1600 பேர் கலந்து கொண்ட தேர்வு, காலை 11 மணிக்கு துவங்கியது. பின்பு, எழுத்துத்தேர்வு ஒரு மணி நேரம் 20 நிமிடங்கள் நடைபெற்றது. 

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...