புதிய வாக்காளர்களின் வாக்கு அதிமுகவிற்கு கிடைக்கும் - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

தமிழக அரசின் சிறப்பான செயல்பாடுகளால் புதிய வாக்காளர்கள் ஆர்வமாக தங்களை வாக்காளர் பட்டியலில் இணைத்துக் கொள்ள வருவதாக, பல்லடம் தொகுதியில் வாக்காளர் சிறப்பு முகாமை ஆய்வு செய்த அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் சிறப்பான செயல்பாடுகளால் புதிய வாக்காளர்கள் ஆர்வமாக தங்களை வாக்காளர் பட்டியலில் இணைத்துக் கொள்ள வருவதாக, பல்லடம் தொகுதியில் வாக்காளர் சிறப்பு முகாமை ஆய்வு செய்த அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 



வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்கள் சேர்த்தல் மற்றும் திருத்தம் செய்வதற்கான, வாக்காளர் சிறப்பு முகாம் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் நடைபெற்று வரக்கூடிய சூழ்நிலையில்், திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரசு பள்ளிகளில் நடைபெற்று வரும் வாக்காளர் சிறப்பு முகாமை கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.



பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர் , தமிழக அரசின் சிறப்பான செயல்பாடுகளால் புதிய வாக்காளர்கள் தங்களை வாக்காளர் பட்டியலில் இணைத்துக் கொள்ள ஆர்வமாக வருவதாகவும் , எந்த மாநிலமும் செய்யாத பல புதிய முயற்சிகளை நம் தமிழக முதல்வர் செய்து வருவதாக தெரிவித்தார். 

குறிப்பாக, நீட் தேர்வில் 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு காரணமாக, ஏராளமான ஏழை எளிய மாணவர்கள் மருத்துவக் கல்வி பயில உதவி மேற்கொண்டுள்ளதாகவும் , இதன் மூலம் புதிய வாக்காளர்களின் வாக்கு அதிமுகவிற்கு கிடைக்கும் எனவும் தமிழக மக்களுக்கு செய்த நலத்திட்டங்கள் மக்களுக்கு சென்றதால் தான் மக்களுக்கு எங்கள் மீது நம்பிக்கை இருப்பதாகவும் பேட்டி அளித்தார். 

இந்நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர் கரைப்புதூர் நடராஜன் உடைய அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...