கோவை: கோவையில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதன் காரணமாக விரக்தியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவையில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதன் காரணமாக விரக்தியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை ரத்தினபுரி ஐசக் வீதியைச் சேர்ந்த ஒர்க்ஷாப் உரிமையாளர் திருவருள் (40). இவரது மனைவி கவிதா (39), இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.
இந்நிலையில், கொரோனா காலத்தில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இதிலிருந்து மீண்டு வர முடியவில்லை. இதனால் விரக்தியில் இருந்த கவிதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதேபோல, பொள்ளாச்சி பொன்னாபுரம் மதுரை வீரன் கோவில் தெருவைச் சேர்ந்த கூலித்தொழிலாளி கருப்பசாமி (60), இரத்த அழுத்தத்திற்கான மாத்திரை சாப்பிட்டு வந்தார். ஆனால், நேற்றிரவு மாத்திரையை மாற்றி சாப்பிட்டுள்ளார்.
இதனால் மயக்கமடைந்த அவரை உறவினர்கள் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி கருப்பசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வடக்கிபாளையம் போலீசார் 174 சட்டப் பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கோவை ரத்தினபுரி ஐசக் வீதியைச் சேர்ந்த ஒர்க்ஷாப் உரிமையாளர் திருவருள் (40). இவரது மனைவி கவிதா (39), இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.
இந்நிலையில், கொரோனா காலத்தில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இதிலிருந்து மீண்டு வர முடியவில்லை. இதனால் விரக்தியில் இருந்த கவிதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதேபோல, பொள்ளாச்சி பொன்னாபுரம் மதுரை வீரன் கோவில் தெருவைச் சேர்ந்த கூலித்தொழிலாளி கருப்பசாமி (60), இரத்த அழுத்தத்திற்கான மாத்திரை சாப்பிட்டு வந்தார். ஆனால், நேற்றிரவு மாத்திரையை மாற்றி சாப்பிட்டுள்ளார்.
இதனால் மயக்கமடைந்த அவரை உறவினர்கள் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி கருப்பசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வடக்கிபாளையம் போலீசார் 174 சட்டப் பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.