கோவையில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்ட விரக்தியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

கோவை: கோவையில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதன் காரணமாக விரக்தியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவையில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதன் காரணமாக விரக்தியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ரத்தினபுரி ஐசக் வீதியைச் சேர்ந்த ஒர்க்ஷாப் உரிமையாளர் திருவருள் (40). இவரது மனைவி கவிதா (39), இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.

இந்நிலையில், கொரோனா காலத்தில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இதிலிருந்து மீண்டு வர முடியவில்லை. இதனால் விரக்தியில் இருந்த கவிதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதேபோல, பொள்ளாச்சி பொன்னாபுரம் மதுரை வீரன் கோவில் தெருவைச் சேர்ந்த கூலித்தொழிலாளி கருப்பசாமி (60), இரத்த அழுத்தத்திற்கான மாத்திரை சாப்பிட்டு வந்தார். ஆனால், நேற்றிரவு மாத்திரையை மாற்றி சாப்பிட்டுள்ளார்.

இதனால் மயக்கமடைந்த அவரை உறவினர்கள் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி கருப்பசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வடக்கிபாளையம் போலீசார் 174 சட்டப் பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Newsletter

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...

அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் வினாடிக்கு 461 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம் 29.99 அடியாகவும் உள்ளது. அண...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பரம்பி...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (21.07.2026) நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...