கோவையில் பெண் காவல் உதவி ஆய்வாளரை தள்ளிவிட்டு கைதி தப்பி ஓட்டம்..! போலீசார் வலைவீச்சு

கோவை: கோவையில் பெண் காவல் உதவி ஆய்வாளரை தள்ளிவிட்டு தப்பி ஓடிய கைதியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


கோவை: கோவையில் பெண் காவல் உதவி ஆய்வாளரை தள்ளிவிட்டு தப்பி ஓடிய கைதியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கோவை ரத்தினபுரி தயிர் இட்டேரியை சேர்ந்தவர் சீனிவாசன் மகன் பிரபு (20), இவர்மீது பிக்பாக்கெட் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. போலீசார் இவரை தேடி வந்த நிலையில் நேற்று கொள்ளையன் பிரபுவை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் உதவி ஆய்வாளர் ரேவதி கொள்ளையனை கோவை அரசு மருத்துவமனைக்கு உடல் பரிசோதனைக்காக அழைத்துச் சென்றார். மேலும், பரிசோதனை முடிந்த பின்னர் அவிநாசி சிறையில் அடைக்க இருந்தனர்.

இந்த நிலையில், கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் வாகனத்தில் இருந்து இறங்கியதும் கொள்ளையன் உதவி காவல் ஆய்வாளர் ரேவதியை தள்ளி விட்டு விட்டு தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மீண்டும் கொள்ளையனை தேடி வருகின்றனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...