கோவையில் பெண் காவல் உதவி ஆய்வாளரை தள்ளிவிட்டு கைதி தப்பி ஓட்டம்..! போலீசார் வலைவீச்சு

கோவை: கோவையில் பெண் காவல் உதவி ஆய்வாளரை தள்ளிவிட்டு தப்பி ஓடிய கைதியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


கோவை: கோவையில் பெண் காவல் உதவி ஆய்வாளரை தள்ளிவிட்டு தப்பி ஓடிய கைதியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கோவை ரத்தினபுரி தயிர் இட்டேரியை சேர்ந்தவர் சீனிவாசன் மகன் பிரபு (20), இவர்மீது பிக்பாக்கெட் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. போலீசார் இவரை தேடி வந்த நிலையில் நேற்று கொள்ளையன் பிரபுவை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் உதவி ஆய்வாளர் ரேவதி கொள்ளையனை கோவை அரசு மருத்துவமனைக்கு உடல் பரிசோதனைக்காக அழைத்துச் சென்றார். மேலும், பரிசோதனை முடிந்த பின்னர் அவிநாசி சிறையில் அடைக்க இருந்தனர்.

இந்த நிலையில், கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் வாகனத்தில் இருந்து இறங்கியதும் கொள்ளையன் உதவி காவல் ஆய்வாளர் ரேவதியை தள்ளி விட்டு விட்டு தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மீண்டும் கொள்ளையனை தேடி வருகின்றனர்.

Newsletter

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...

அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் வினாடிக்கு 461 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம் 29.99 அடியாகவும் உள்ளது. அண...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பரம்பி...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (21.07.2026) நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...