பொள்ளாச்சியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து கட்சித் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சி: கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் (கொ.ம.தே.க) பொதுச்செயலாளர் ஈஸ்வரன், இன்று கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, அக்கட்சித் தொண்டர்கள் பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



பொள்ளாச்சி: கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் (கொ.ம.தே.க) பொதுச்செயலாளர் ஈஸ்வரன், இன்று கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, அக்கட்சித் தொண்டர்கள் பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில், தென் பெண்ணை ஆற்றுக்கும், தூள்செட்டி ஏரிக்கும் இடையே கால்வாய் அமைக்க வலியுறுத்தி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றார். அப்போது, தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரைத் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். 



ஈஸ்வரன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து பொள்ளாச்சியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மாவட்டச் செயலாளர் நித்தியானந்தன், தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திந்போது அங்கு கூடியிருந்த தொண்டர்கள் தமிழக அரசு மற்றும் காவல்துறையினரைக் கண்டித்து, கோஷங்கள் எழுப்பினர். 



தன்னை விவசாயி என்று சொல்லிக் கொள்ளும் முதலமைச்சர் எடப்பாடி, விவசாயிகளுக்கு எதிராக நடப்பதுடன், விவசாயிகளுக்கு ஆதரவாகப் போராடும் அமைப்புகள் மற்றும் கட்சியினருக்குத் தடையாக இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்தனர். மேலும், கொ.ம.தே.க தலைவர் ஈஸ்வரனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட அக்கட்சியின் தொண்டர்கள் கோரிக்கை விடுத்தனர்.



இதேபோல், கோவை கவுண்டம்பாளயம் பகுதியில் கொ.ம.தே.க கட்சித் தொண்டர்கள் ஈஸ்வரன் கைதைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...