பொள்ளாச்சியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து கட்சித் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சி: கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் (கொ.ம.தே.க) பொதுச்செயலாளர் ஈஸ்வரன், இன்று கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, அக்கட்சித் தொண்டர்கள் பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



பொள்ளாச்சி: கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் (கொ.ம.தே.க) பொதுச்செயலாளர் ஈஸ்வரன், இன்று கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, அக்கட்சித் தொண்டர்கள் பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில், தென் பெண்ணை ஆற்றுக்கும், தூள்செட்டி ஏரிக்கும் இடையே கால்வாய் அமைக்க வலியுறுத்தி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றார். அப்போது, தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரைத் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். 



ஈஸ்வரன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து பொள்ளாச்சியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மாவட்டச் செயலாளர் நித்தியானந்தன், தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திந்போது அங்கு கூடியிருந்த தொண்டர்கள் தமிழக அரசு மற்றும் காவல்துறையினரைக் கண்டித்து, கோஷங்கள் எழுப்பினர். 



தன்னை விவசாயி என்று சொல்லிக் கொள்ளும் முதலமைச்சர் எடப்பாடி, விவசாயிகளுக்கு எதிராக நடப்பதுடன், விவசாயிகளுக்கு ஆதரவாகப் போராடும் அமைப்புகள் மற்றும் கட்சியினருக்குத் தடையாக இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்தனர். மேலும், கொ.ம.தே.க தலைவர் ஈஸ்வரனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட அக்கட்சியின் தொண்டர்கள் கோரிக்கை விடுத்தனர்.



இதேபோல், கோவை கவுண்டம்பாளயம் பகுதியில் கொ.ம.தே.க கட்சித் தொண்டர்கள் ஈஸ்வரன் கைதைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Newsletter

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...

அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் வினாடிக்கு 461 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம் 29.99 அடியாகவும் உள்ளது. அண...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பரம்பி...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (21.07.2026) நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...