நீலகிரி: நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சேரம்பாடியில் யானை தாக்கி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சேரம்பாடியில் யானை தாக்கி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகாவிலுள்ள சேரம்பாடி பகுதியிலுள்ள கண்ணம்பள்ளி எஸ்டேட்டில் வசித்து வந்தவர் நாகமுத்து(65).
இவர் நேற்று இரவு அப்பகுதியிலுள்ள கடைக்கு வெற்றிலை பாக்கு வாங்கச் சென்றுள்ளார். இந்நிலையில், வீடு திரும்பும்போது கடைவீதியிலேயே யானை மிதித்துக் கொன்றது.
இதனையடுத்து, அருகிலிருந்தவர்கள் கொடுத்த தகவலின் பேரில் வனத்துறையினர் விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பந்தலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதேபோல, இன்று காலை கோவை கெம்பனூர் வனத்துறைக்கு உட்பட்ட இளச்சி பகுதியில் இயற்கை உபாதையை கழிக்கச் சென்ற ஆறுமுகம்(75) என்ற முதியவர் ஆண் யானை மிதித்ததில் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் ஆறுமுகச்சாமி (19), முத்து (18) ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.