கோவை: நாம் செய்யும் தான தர்மங்களை விளம்பரப்படுத்த கூடாது என்பதை குறிக்கும் வகையில் நாம் முன்னோர்கள் சொல்லி வைத்த ஒரு பழமொழி தான் "இடது கை கொடுப்பது வலது கைக்கு தெரியக்கூடாது" என்பது. அந்த வாக்கிற்கு இணங்க வாழ்ந்து காட்டியவர் கோவை சாந்தி சோஷியல் சர்வீஸ் அமைப்பின் அறங்காவலர் சுப்பிரமணியம் (78).
கோவை: நாம் செய்யும் தான தர்மங்களை விளம்பரப்படுத்த கூடாது என்பதை குறிக்கும் வகையில் நாம் முன்னோர்கள் சொல்லி வைத்த ஒரு பழமொழி தான் "இடது கை கொடுப்பது வலது கைக்கு தெரியக்கூடாது" என்பது. அந்த வாக்கிற்கு இணங்க வாழ்ந்து காட்டியவர் கோவை சாந்தி சோஷியல் சர்வீஸ் அமைப்பின் அறங்காவலர் சுப்பிரமணியம் (78).
மனதார செய்யும் மக்கள் சேவைக்கு விளம்பரம் எதற்கு என்று, ஊடகங்களில்முகத்தை காட்டுவதில்லை என்று இறுதி வரை உறுதியாக இருந்தவர் அவர். கடந்த சில தினங்களாக, உடல்நிலை குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அவர், சிகிச்சை பலனின்றி இன்று காலை 5.30 மணிக்கு உயிரிழந்தார்.
கோவையில் சாந்தி கியர்ஸ் என்ற நிறுவனத்தை 1972 -ல் துவங்கி. இயந்திர உதிரி பாகங்களை பல்வேறு நாடுகளுக்கு தயாரித்து கொடுத்து வேகமாக வளர்ச்சி அடைந் தார். 1996-ம் ஆண்டு சாந்தி சோஷியல் சர்வீஸ் என்ற அமைப்பினை சுப்பிரமணியம் துவக்கினார். இந்த அமைப்பின் அறங்காவலராக சுப்ரமணியம் இருந்து வருகிறார். சாந்தி கியர்ஸ் நிறுவனம் சமீபத்தில் வேறு நிறுவனத்திற்கு விற்கப்பட்டது. சாந்தி சோஷியல் சர்வீஸ் பணிகளை மட்டும் சுப்பிரமணியம் கவனித்து வந்தார்.
இறந்த பின்னும் எளிமை..!
நேற்று மாலை, தன்னுடைய மகளிடம் நான் இறந்தவுடன், இறப்புச்செய்தி என்னுடைய பணியாளர்களுக்கும் மற்றவர்களுக்கும் தெரிய வேண்டாம். மிகவும் எளிமையான முறையில் என்னை தகனம் செய்யவும், என்னுடைய இறப்பு நிகழ்ச்சியில் ஊர்வலத்தில் யாரும் கலந்து கொள்ள வேண்டாம், என உறுதியாக கூறிருக்கிறார்.
இறுதி சடங்கில் நெகிழ்ச்சி..!
அதன்படி, சாந்தி சோஷியல் சர்வீஸ் அமைப்பால் நடத்தப்படும் இலவச மின் மயானத்தில் அவரது இறுதி சடங்கு செய்ய திட்டமிடப்பட்டது. மேலும், அவரின் விருப்பம்படி, நெருங்கிய உறவினர்கள் தவிர வேறு யாருக்கும் அவர் இறந்த தகவல் தெரிவிக்கப்படவில்லை.
அப்போது, கடைசியாக மின்மயானத்தில் தகனம் செய்ய செல்லும் போது, அங்குள்ள மின் மயான பணியாளர்கள் 4 பேர், அந்த வாகனத்திற்கு பின்னால் சென்று உடலை தகனம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர். பின்னர், தகனம் செய்து முடித்த பின்னர் தான் இறந்தது, நம்முடைய முதலாளி என்பதே, அவர்களுக்குத் தெரியவந்துள்ளது.
இறக்கும் வரை ஊடகங்களுக்கும் பத்திரிகைகளுக்கும் முகத்தை காட்டாமல் இருந்த அவர், இறந்த பின்பும் அதை நிரூபித்துக் காட்டியுள்ளார். முகம் காட்டாவிட்டாலும், அவரின் தன்னலமற்ற சேவைகள் மூலம் கோவை மக்களின் மனதில் என்றும் வாழ்ந்து கொண்டிருப்பார், என்பதில் ஐயமில்லை.