மனைவி மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய கணவர் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு

கோவை: கோவை ஒத்தக்கால் மண்டபம் அருகே உள்ள பிரிமியர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (40), இவர் மனைவி ஜெயா (35). சுரேஷ் மற்றும் அவரது மனைவியும் கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த நான்கு மாதங்களாக தனியாக பிரிந்து வசித்து வருகின்றனர்.

கோவை: கோவை ஒத்தக்கால் மண்டபம் அருகே உள்ள பிரிமியர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (40), இவர் மனைவி ஜெயா (35). சுரேஷ் மற்றும் அவரது மனைவியும் கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த நான்கு மாதங்களாக தனியாக பிரிந்து வசித்து வருகின்றனர். 

இந்த நிலையில், ஜெயா வசித்துவரும் வீட்டை காலி செய்யச் சொல்லி வீட்டின் உரிமையாளர் ராஜகோபால் மற்றும் அவர் மனைவி கோமதி ஆகியோர் வலியுறுத்தி வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. அப்போது, ஜெயா தான் கொடுத்த மூன்று லட்ச ரூபாயை திரும்ப கொடுத்தால் வீட்டை காலி செய்வதாக கூறியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட மோதலில் ராஜகோபால், கோமதி ஆகியோருடன் சேர்ந்து கணவர் சுரேஷ், தனது மனைவியை சரமாரியாக தாக்கியுள்ளார். 

இதில் பலத்த காயமடைந்த ஜெயா, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ஜெயா கொடுத்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...