மனைவி மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய கணவர் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு

கோவை: கோவை ஒத்தக்கால் மண்டபம் அருகே உள்ள பிரிமியர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (40), இவர் மனைவி ஜெயா (35). சுரேஷ் மற்றும் அவரது மனைவியும் கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த நான்கு மாதங்களாக தனியாக பிரிந்து வசித்து வருகின்றனர்.

கோவை: கோவை ஒத்தக்கால் மண்டபம் அருகே உள்ள பிரிமியர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (40), இவர் மனைவி ஜெயா (35). சுரேஷ் மற்றும் அவரது மனைவியும் கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த நான்கு மாதங்களாக தனியாக பிரிந்து வசித்து வருகின்றனர். 

இந்த நிலையில், ஜெயா வசித்துவரும் வீட்டை காலி செய்யச் சொல்லி வீட்டின் உரிமையாளர் ராஜகோபால் மற்றும் அவர் மனைவி கோமதி ஆகியோர் வலியுறுத்தி வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. அப்போது, ஜெயா தான் கொடுத்த மூன்று லட்ச ரூபாயை திரும்ப கொடுத்தால் வீட்டை காலி செய்வதாக கூறியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட மோதலில் ராஜகோபால், கோமதி ஆகியோருடன் சேர்ந்து கணவர் சுரேஷ், தனது மனைவியை சரமாரியாக தாக்கியுள்ளார். 

இதில் பலத்த காயமடைந்த ஜெயா, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ஜெயா கொடுத்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...

அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் வினாடிக்கு 461 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம் 29.99 அடியாகவும் உள்ளது. அண...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பரம்பி...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (21.07.2026) நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...