கோவை: கோவையில் பொள்ளாச்சி - போத்தனூர் இடையே 110 கிலோ மீட்டர் வேகத்தில் அதிவேக ரயில் சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது.
கோவை: கோவையில் பொள்ளாச்சி - போத்தனூர் இடையே 110 கிலோ மீட்டர் வேகத்தில் அதிவேக ரயில் சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது.
பொள்ளாச்சியில் இருந்து திண்டுக்கல், பாலக்காடு, கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு அகல ரயில் பாதை பணிகள் முடிவடைந்து, ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில், கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, பாலகாட்டில் இருந்து சென்னைக்கு பொள்ளாச்சி வழியாக ஒரு பயணிகள் ரயில் மட்டும் தற்போது இயக்கப்பட்டு வருகிறது.
இதுவரை தென்னக ரயில்வே சார்பில் பொள்ளாச்சி - கோவை மற்றும் திண்டுக்கல் - பாலக்காடு இடையே இயங்கும் ரயில்கள் 80 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல அனுமதி அளித்திருந்தது.
இந்த நிலையில், தற்போது பொள்ளாச்சி வழியாக இயங்கும் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க தற்போது வேக பரிசோதனைகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, இன்று உதவி செயற்பொறியாளர் கண்ணதாசன் தலைமையில் பொள்ளாச்சி போத்தனூர் இடையே 110 கிலோ மீட்டர் வேகத்தில், அதிவேக ரயில் சோதனை ஓட்டம் 3 பெட்டிகளுடன் நடைபெற்றது.
இதனிடையே, சோதனை ஓட்டத்தில் தற்போது சேகரிக்கப்பட்ட விவரங்கள் ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு அனுப்பப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொள்ளாச்சியில் இருந்து திண்டுக்கல், பாலக்காடு, கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு அகல ரயில் பாதை பணிகள் முடிவடைந்து, ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில், கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, பாலகாட்டில் இருந்து சென்னைக்கு பொள்ளாச்சி வழியாக ஒரு பயணிகள் ரயில் மட்டும் தற்போது இயக்கப்பட்டு வருகிறது.
இதுவரை தென்னக ரயில்வே சார்பில் பொள்ளாச்சி - கோவை மற்றும் திண்டுக்கல் - பாலக்காடு இடையே இயங்கும் ரயில்கள் 80 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல அனுமதி அளித்திருந்தது.
இந்த நிலையில், தற்போது பொள்ளாச்சி வழியாக இயங்கும் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க தற்போது வேக பரிசோதனைகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, இன்று உதவி செயற்பொறியாளர் கண்ணதாசன் தலைமையில் பொள்ளாச்சி போத்தனூர் இடையே 110 கிலோ மீட்டர் வேகத்தில், அதிவேக ரயில் சோதனை ஓட்டம் 3 பெட்டிகளுடன் நடைபெற்றது.
இதனிடையே, சோதனை ஓட்டத்தில் தற்போது சேகரிக்கப்பட்ட விவரங்கள் ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு அனுப்பப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.