கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நடூர் பகுதியில் கடந்த ஆண்டு தீண்டாமை சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பலியாகினர். இதனிடையே, கடந்த மாதம் மீண்டும் அதே இடத்தில் தீண்டாமை சுவர் கட்டப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. இது குறித்து பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நடூர் பகுதியில் கடந்த ஆண்டு தீண்டாமை சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பலியாகினர்.

இதனிடையே, கடந்த மாதம் மீண்டும் அதே இடத்தில் தீண்டாமை சுவர் கட்டப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. இது குறித்து பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இதனிடையே, மேட்டுப்பாளையத்தில் தீண்டமை சுவர் கட்டப்பட்டுள்ளது, தொடர்பாக விசாரணை நடத்தி 15 நாள்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க மாவட்ட ஆட்சியர் ராஜாமணிக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் அளித்துள்ள நோட்டீஸில்: கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் நடூரில் தீண்டாமை சுவர் கட்டப்பட்டுள்ளதாக தமிழ் புலிகள் அமைப்பின் கோவை மார்க்ஸ் என்பவர் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு விவரங்களை 15 நாள்களுக்குள் ஆணையத்துக்கு அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும், என கூறப்பட்டுள்ளது.