வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் கம்யூனிஸ்ட் கட்சியினர் பிரதமர் மோடியின் கொடும்பாவியை எரித்து போராட்டம்!

கோவை: மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் கம்யூனிஸ்ட் கட்சியினர் பிரதமர் மோடியின் கொடும்பாவியை தீவைத்து எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் கம்யூனிஸ்ட் கட்சியினர் பிரதமர் மோடியின் கொடும்பாவியை தீவைத்து எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை மாவட்டம் சூலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட இரண்டு இடங்களில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதற்காக கம்யூனிஸ்ட் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



சுல்தான் பேட்டையில் நடைபெற்ற போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் அவர்கள் கலந்து கொண்டார். 300க்கும் மேற்பட்டோர் பல்லடம் கொச்சின் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இந்த மறியலில் ஈடுபட்டவர்கள் மத்திய மாநில அரசுகளை கண்டித்தும், வேளாண் சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர்.

இந்த மறியலில் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜன் அவர்களுடன் விவசாயிகள் சங்கத் தலைவர் சு.பழனிசாமி, சுல்தான்பேட்டை மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் மகாலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த மறியல் போராட்டத்தால் பல்லடம், கொச்சின் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறை கைது செய்தனர்.



அதேபோல, பாப்பம்பட்டி பிரிவில் நடைபெற்ற போராட்டத்தில் சிஐடியு மாவட்ட பொருளாளர் வேலுச்சாமி, கண்ணம்பாளையம் முன்னாள் பேரூராட்சி தலைவர் முனுசாமி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் 150க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தில் பிரதமர் மோடி அவர்களின் உருவ பொம்மையை எரித்தனர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

பின்னர் செய்தியாளரிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜன் அவர்கள், வேளாண் சட்டங்களை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கைக்கு அரசானது செவிசாய்க்க வேண்டும் என்றார்.

மேலும், தமிழக அரசு வேளாண் மசோதாக்களை தமிழ்நாட்டில் அமல்படுத்த மாட்டோம் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்தார். அதேபோல் சுல்தான்பேட்டை மேற்கு ஒன்றிய பகுதியில் நிலவும் கடும் தண்ணீர் பஞ்சத்தை போக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...