கோவை: ஈரோடு மாவட்டம் காஞ்சிகோவில், தண்ணீர்பந்தல் பாளையத்தை சேர்ந்தவர் நந்தகுமார் அவரது அக்காள் கிருஷ்ணவேணி (வயது 37), இவர்கள் 2 பேரும் ஈரோட்டில் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தனர்.
கோவை: ஈரோடு மாவட்டம் காஞ்சிகோவில், தண்ணீர்பந்தல் பாளையத்தை சேர்ந்தவர் நந்தகுமார் அவரது அக்காள் கிருஷ்ணவேணி (வயது 37), இவர்கள் 2 பேரும் ஈரோட்டில் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தனர்.
அப்போது, தங்கள் நிறுவனத்தின் முதலீடு செய்தவர்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் முதலீடு செய்தால், மாதம் ரூபாய் 12 ஆயிரம் வட்டி தருவதாக கூறி உள்ளனர். மேலும், தாங்கள் செலுத்தும் பணத்தை ஒரு வருடத்தில் திருப்பித் தந்து விடுவதாகவும் கூறி உள்ளனர். இதை நம்பி, பலர் அந்த நிதி நிறுவனத்தில் பணத்தை கொடுத்து உள்ளனர்.
ஆனால், பணம் செலுத்தியவர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்கவில்லை என தெரிகிறது. இப்படி 39 பேரிடம் பணத்தை பெற்று ரூபாய் 82 லட்சத்து 27 ஆயிரம் வரை மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து, ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து நந்தகுமார், கிருஷ்ணவேணியை கைது செய்து அவர்கள் மீது வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு, தமிழ்நாடு முதலீட்டாளர் நலன் சிறப்பு நீதிமன்றம் (டான்பிட்) கோர்ட்டில் நடந்து வந்தது. இந்நீதிமன்றத்தில், கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களிலுள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் பதிவாகும், நிதி நிறுவன மோசடிகளை விசாரித்து வருகிறது.
அதன்படி, இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று கூறப்பட்டது. வழக்கை விசாரித்த, நீதிபதி ரவி மோசடிகளில் ஈடுபட்ட நந்தகுமார் மற்றும் கிருஷ்ணவேணி ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூபாய் 40 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
அப்போது, தங்கள் நிறுவனத்தின் முதலீடு செய்தவர்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் முதலீடு செய்தால், மாதம் ரூபாய் 12 ஆயிரம் வட்டி தருவதாக கூறி உள்ளனர். மேலும், தாங்கள் செலுத்தும் பணத்தை ஒரு வருடத்தில் திருப்பித் தந்து விடுவதாகவும் கூறி உள்ளனர். இதை நம்பி, பலர் அந்த நிதி நிறுவனத்தில் பணத்தை கொடுத்து உள்ளனர்.
ஆனால், பணம் செலுத்தியவர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்கவில்லை என தெரிகிறது. இப்படி 39 பேரிடம் பணத்தை பெற்று ரூபாய் 82 லட்சத்து 27 ஆயிரம் வரை மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து, ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து நந்தகுமார், கிருஷ்ணவேணியை கைது செய்து அவர்கள் மீது வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு, தமிழ்நாடு முதலீட்டாளர் நலன் சிறப்பு நீதிமன்றம் (டான்பிட்) கோர்ட்டில் நடந்து வந்தது. இந்நீதிமன்றத்தில், கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களிலுள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் பதிவாகும், நிதி நிறுவன மோசடிகளை விசாரித்து வருகிறது.
அதன்படி, இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று கூறப்பட்டது. வழக்கை விசாரித்த, நீதிபதி ரவி மோசடிகளில் ஈடுபட்ட நந்தகுமார் மற்றும் கிருஷ்ணவேணி ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூபாய் 40 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.