திருப்பூர்: அறுவை சிகிச்சை செய்ய ஆயுர்வேத மருத்துவத்திற்கு அனுமதி வழங்கியதை கண்டித்து திருப்பூரில் இந்திய மருத்துவ சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர்: அறுவை சிகிச்சை செய்ய ஆயுர்வேத மருத்துவத்திற்கு அனுமதி வழங்கியதை கண்டித்து திருப்பூரில் இந்திய மருத்துவ சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய அரசு 58 வகையான நவீன அறுவை சிகிச்சைகளை சால்ய தந்திரம் என்று பட்டியலிட்டு இந்த சிகிச்சைகளை செய்ய ஆயுர்வேத மருத்துவர்களுக்கு அனுமதி அளித்துள்ளது.
அறுவை சிகிச்சை முறைகள் நவீன மருத்துவத்தை சார்ந்துள்ள சூழ்நிலையில் எந்தவித முன் பயிற்சியும் இல்லாமல் சிகிச்சைக்கு பிறகு கொடுக்க வேண்டிய நுண்ணுயிர் கொல்லி மருந்துகள் பற்றிய போதிய அறிவு இல்லாமல் ஆயுர்வேத மருத்துவர்கள் சிகிச்சை செய்வது உயிருக்கு ஆபத்தாகவே அமையும் எனவும் உடனடியாக மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என வலியுறுத்தியும் திருப்பூர் ரயில் நிலையம் முன்பாக இந்திய மருத்துவச் சங்கத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், மத்திய அரசு தங்கள் கோரிக்கைகளை பரிசீலிக்காவிட்டால் வரும் 11ம் தேதி 24 மணிநேர மருத்துவ பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்ட போவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மத்திய அரசு 58 வகையான நவீன அறுவை சிகிச்சைகளை சால்ய தந்திரம் என்று பட்டியலிட்டு இந்த சிகிச்சைகளை செய்ய ஆயுர்வேத மருத்துவர்களுக்கு அனுமதி அளித்துள்ளது.
அறுவை சிகிச்சை முறைகள் நவீன மருத்துவத்தை சார்ந்துள்ள சூழ்நிலையில் எந்தவித முன் பயிற்சியும் இல்லாமல் சிகிச்சைக்கு பிறகு கொடுக்க வேண்டிய நுண்ணுயிர் கொல்லி மருந்துகள் பற்றிய போதிய அறிவு இல்லாமல் ஆயுர்வேத மருத்துவர்கள் சிகிச்சை செய்வது உயிருக்கு ஆபத்தாகவே அமையும் எனவும் உடனடியாக மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என வலியுறுத்தியும் திருப்பூர் ரயில் நிலையம் முன்பாக இந்திய மருத்துவச் சங்கத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், மத்திய அரசு தங்கள் கோரிக்கைகளை பரிசீலிக்காவிட்டால் வரும் 11ம் தேதி 24 மணிநேர மருத்துவ பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்ட போவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.