கோவை: மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் 13 நாட்களாக போராடி வருகின்றனர். விவசாயிகளுக்கு ஆதரவாக இந்தியா முழுவதும் பல்வேறு கட்சியினரும், பொது அமைப்புகளும் மத்திய அரசின் வேளாண் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி இன்று பொது வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டு பல்வேறு கட்சியினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
கோவை: மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் 13 நாட்களாக போராடி வருகின்றனர். விவசாயிகளுக்கு ஆதரவாக இந்தியா முழுவதும் பல்வேறு கட்சியினரும், பொது அமைப்புகளும் மத்திய அரசின் வேளாண் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி இன்று பொது வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டு பல்வேறு கட்சியினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, கோவையில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட எஸ்டிபிஐ கட்சியினர் மத்திய அரசை கண்டித்தும் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி வந்தனர்.

இதனையடுத்து, ரயில் நிலையத்திற்குள் நுழைய முயன்றவர்களுக்கும், காவல் துறையினர் தடுத்து நிறுத்த முயன்றபோது, தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்து அழைத்து சென்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ரயில் மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.