நோய் தொற்று பரவலை தவிர்க்க ரயில் நிலையம் செல்வதை தவிர்த்து இ-டிக்கெட் பெறுவதில் முக்கியத்துவம் அளிக்க சேலம் கோட்டம் வேண்டுகோள்!

கோவை: கொரோனா தொற்றை தவிர்க்கும் விதமாக ரயில் நிலையம் செல்வதை தவிர்த்து இ-டிக்கெட் பெறுவதில் முக்கியத்துவம் அளித்து சேலம் கோட்டம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


கோவை: கொரோனா தொற்றை தவிர்க்கும் விதமாக ரயில் நிலையம் செல்வதை தவிர்த்து இ-டிக்கெட் பெறுவதில் முக்கியத்துவம் அளித்து சேலம் கோட்டம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

நிவர் புயல் காரணமாக சமீபத்தில் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் ரயில்களில் டிக்கெட் கட்டணத்தை திரும்பப்பெறக் கோவை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் பயணிகள் வரிசையில் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில், தற்போது கொரோனா நோய் பரவல் கட்டுப்படுத்தப்பட்டு வரும் சூழலில் பயணிகள் ரயில் நிலையத்தில் கூடுவதை தவிர்த்து ஐ.ஆர்.சி.டி.சியின் ஆன்லைன் முன்பதிவுக்கு முக்கியத்துவம் அளிக்குமாறு சேலம் கோட்டம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து சேலம் கோட்ட ரயில்வே அதிகாரி கூறியதாவது:-

ஐ.ஆர்.சி. டி.சி இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு ரத்து செய்யப்பட்ட ரயில்களில் டிக்கெட் பணம் வங்கி கணக்கில் திரும்பவும் சேர்ந்துவிடும். கவுண்டர்களில் முன்பதிவு செய்தவர்கள் பயண தேதியிலிருந்து 6 மாதங்களுக்குள் கட்டணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். இது குறித்து அறியாத சிலர் ரயில் நிலையத்திற்கு வருகின்றனர். தற்போதைய சூழலில் முடிந்தவரை டிக்கெட் முன்பதிவுக்கு ரயில் நிலையம் வருவதை தவிர்த்து ஆன்லைன் பயன்பாட்டுக்கு முக்கியத்துவம் அளித்தால் நல்லது, இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...