கோவை: கோவையில் ஸ்ட்ரீட் வெண்டர் திட்டத்தில் அடையாள அட்டை இல்லாத அனுமதியில்லாத 69 ஆயிரத்து 236 வியாபாரிகளின் கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோவை: கோவையில் ஸ்ட்ரீட் வெண்டர் திட்டத்தில் அடையாள அட்டை இல்லாத அனுமதியில்லாத 69 ஆயிரத்து 236 வியாபாரிகளின் கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, பகுதிகளில் நடைபாதை வியாபாரிகளுக்கான (ஸ்டீரிட் வெண்டர்) தனிக் கொள்கை உருவாக்கப்பட்டு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
கடந்த ஆண்டு ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 431 நடைபாதை வியாபாரிகள் பொது இடத்தில் தள்ளுவண்டிகளில் வியாபாரம் செய்வது தெரிய வந்தது. அதில், இதுவரை 80 ஆயிரத்து 667 பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு கடை நடத்த இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு கடை நடத்த அனுமதி வழங்கப்படவில்லை.
இந்த நிலையில், அடையாள அட்டை இல்லாத அனுமதியில்லாத 69 ஆயிரத்து 236 வியாபாரிகளுக்கு உள்ளாட்சி நிர்வாகம் போலீஸ் நெடுஞ்சாலைத்துறை பொதுப்பணித் துறையினர் தடை விதித்துள்ளனர்.
மேலும், தடையை மீறி கடை நடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒரு சில வியாபாரிகள் எங்களுடைய பெயர்களை திட்டமிட்டு ஸ்ட்ரீட் வெண்டர் திட்டத்தில் சேர்த்து அனுமதி வழங்கவில்லை. கடை நடத்த முறையான அனுமதி வேண்டும் என நடைபாதை வியாபாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, பகுதிகளில் நடைபாதை வியாபாரிகளுக்கான (ஸ்டீரிட் வெண்டர்) தனிக் கொள்கை உருவாக்கப்பட்டு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
கடந்த ஆண்டு ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 431 நடைபாதை வியாபாரிகள் பொது இடத்தில் தள்ளுவண்டிகளில் வியாபாரம் செய்வது தெரிய வந்தது. அதில், இதுவரை 80 ஆயிரத்து 667 பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு கடை நடத்த இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு கடை நடத்த அனுமதி வழங்கப்படவில்லை.
இந்த நிலையில், அடையாள அட்டை இல்லாத அனுமதியில்லாத 69 ஆயிரத்து 236 வியாபாரிகளுக்கு உள்ளாட்சி நிர்வாகம் போலீஸ் நெடுஞ்சாலைத்துறை பொதுப்பணித் துறையினர் தடை விதித்துள்ளனர்.
மேலும், தடையை மீறி கடை நடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒரு சில வியாபாரிகள் எங்களுடைய பெயர்களை திட்டமிட்டு ஸ்ட்ரீட் வெண்டர் திட்டத்தில் சேர்த்து அனுமதி வழங்கவில்லை. கடை நடத்த முறையான அனுமதி வேண்டும் என நடைபாதை வியாபாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.