கோவையில் கட்டில் மீது பீரோ விழுந்ததில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டி பரிதாபமாக உயிரிழப்பு!

கோவை: கோவையில் கட்டில் மீது பீரோ விழுந்ததில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவையில் கட்டில் மீது பீரோ விழுந்ததில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்தவர் சுரேஷ் (65), இவர் மனைவி மீனலோசினி (62), இவர்களுக்கு மகன் மற்றும் மகள் உள்ளனர். மகள் கொடைக்கானலிலும், மகன் பெங்களூரிலும் வசிக்கின்றனர்.

இதனிடையே, கவனிக்க ஆள் இல்லாத நிலையில் மீனலோசினி தொண்டாமுத்தூர் வண்டிகாரணூரில் உள்ள ஒரு காப்பகத்தில் வசித்து வந்தார். சுரேஷ் சென்னையில் வசித்து வந்தார்.

இந்நிலையில், சுரேஷ் தனது மனைவியை செல்போனில் தொடர்பு கொண்டு இனி அங்கே இருக்க வேண்டாம். சென்னைக்கு வா என அழைத்தார். இதைத்தொடர்ந்து, மீனலோசினி காப்பகத்தில் இருந்த தனது பொருட்களை நேற்று முன்தினம் எடுத்து பேக் செய்து வைத்துவிட்டு இரவு தூங்கச் சென்றார்.

இந்த நிலையில், காலையில் காப்பக ஊழியர்கள் எழுப்பச் சென்ற போது, அவரது கட்டில் மீது பீரோ விழுந்து கிடந்தது. இதில் உடல் நசுங்கி மீனலோசினி இறந்து கிடந்தார்.

இதனை தொடர்ந்து, தொண்டாமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...