கோவை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ள விமானம் மூலம் நேற்று மாலை கோவை வந்தார். முதல்வர் வருகையையொட்டி ஏராளமான தொண்டர்கள் ஆங்காங்கே குவிந்து இருந்தனர்.
கோவை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ள விமானம் மூலம் நேற்று மாலை கோவை வந்தார். முதல்வர் வருகையையொட்டி ஏராளமான தொண்டர்கள் ஆங்காங்கே குவிந்து இருந்தனர்.
மேலும், முதல்வர் செல்லும் பாதையிலும் சிறு மேடைகள் அமைக்கப்பட்டு வரவேற்பளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில், கோவை காளப்பட்டி - விளாங்குறிச்சி சாலையில் தனியார் பெட்ரோல் அருகே வரவேற்பளிக்க மற்றும் தொண்டர்கள் நிற்க, சிறிய மேடை அமைக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், நேற்று பலத்த மழை பெய்ததால், அந்த மேடையின் அருகில் இருந்த மின்விளக்கு சரிந்து விழுந்தது. நல்ல வேளையாக, மழை காரணமாக அப்பகுதியில் தொண்டர்கள் யாரும் இல்லாததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
ஏற்கனவே, கோவையில் அதிமுகவினர் வைத்த கட் அவுட் காரணமாக இளைஞர் ஒருவர் உயிரிழந்ததும், கட்சி கொடி கம்பம் சாய்ந்து இளம் பெண் விபத்துக்குள்ளாகி கால் துண்டிக்கப்பட்ட, சம்பவங்கள் நடைபெற்று இருப்பது குறிப்பிடதக்கது.
மேலும், முதல்வர் செல்லும் பாதையிலும் சிறு மேடைகள் அமைக்கப்பட்டு வரவேற்பளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில், கோவை காளப்பட்டி - விளாங்குறிச்சி சாலையில் தனியார் பெட்ரோல் அருகே வரவேற்பளிக்க மற்றும் தொண்டர்கள் நிற்க, சிறிய மேடை அமைக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், நேற்று பலத்த மழை பெய்ததால், அந்த மேடையின் அருகில் இருந்த மின்விளக்கு சரிந்து விழுந்தது. நல்ல வேளையாக, மழை காரணமாக அப்பகுதியில் தொண்டர்கள் யாரும் இல்லாததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
ஏற்கனவே, கோவையில் அதிமுகவினர் வைத்த கட் அவுட் காரணமாக இளைஞர் ஒருவர் உயிரிழந்ததும், கட்சி கொடி கம்பம் சாய்ந்து இளம் பெண் விபத்துக்குள்ளாகி கால் துண்டிக்கப்பட்ட, சம்பவங்கள் நடைபெற்று இருப்பது குறிப்பிடதக்கது.