கோவை: பாரதிய ஜனதா கட்சி சார்பில் வெற்றிவேல் யாத்திரையானது நவம்பர் 6ம் தேதி துவங்கி முருகனின் முக்கிய வழிபாட்டு தலங்கள் வழியாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கோவை: பாரதிய ஜனதா கட்சி சார்பில் வெற்றிவேல் யாத்திரையானது நவம்பர் 6ம் தேதி துவங்கி முருகனின் முக்கிய வழிபாட்டு தலங்கள் வழியாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், வெற்றிவேல் யாத்திரைக்கு வரவேற்பு தெரிவிக்கும் விதமாக கோவையில் பா.ஜ.க இளைஞரணி சார்பில், இளம்பெண்கள் மட்டும் பங்கேற்ற இருசக்கர வாகன பேரணியானது நடைபெற்றது.
இந்த இருசக்கர வாகன பேரணியை பா.ஜ.க இளைஞரணி தலைவர் செல்வம் துவக்கி வைத்தார்.
இந்த பேரணியில் கலந்து கொண்ட பெண்கள் காவி நிற தலைப்பாகை அணிந்தும், கழுத்தில் மாலை சூடிக்கொண்டும் வாகன பேரணியாக சென்றனர்.
மேலும், இருசக்கர வாகன பேரணியின் நடுவில், காரின் மேல் பகுதியில் முருகன் சிலை வைக்கப்பட்டு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.