கோவை: பிரதமர் மோடி அவர்களின் புகைப்படத்தை அரசு அலுவலகங்களில் வைக்க வேண்டும் என்று கோவையில் பாஜகவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை: பிரதமர் மோடி அவர்களின் புகைப்படத்தை அரசு அலுவலகங்களில் வைக்க வேண்டும் என்று கோவையில் பாஜகவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
1978ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட அரசாணையின்படி அரசு அலுவலகங்களில் நாட்டின் பிரதமர் அவர்களின் புகைப்படத்தை வைக்கலாம் என்று அரசாணை உள்ளது.

அதன்படி அரசு அலுவலகங்களில் தற்போது உள்ள பிரதமர் மோடி அவர்களின் புகைப்படத்தை வைக்க வேண்டும் என்று பாஜகவினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மோடி அவர்களின் புகைப்படத்துடன் வந்திருந்தனர்.
அப்போது, மாவட்ட ஆட்சியர் ஆலோசனைக் கூட்டத்தில் இருந்ததால் மாவட்ட ஆட்சியரை சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால் பாஜகவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட முயன்றனர் ஆனால், அவர்களை காவல்துறையினர் தடுத்ததால் பாஜகவினர் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தி காவல்துறையினர் அவர்களை அனுப்பி வைத்தனர். இதனால் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
1978ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட அரசாணையின்படி அரசு அலுவலகங்களில் நாட்டின் பிரதமர் அவர்களின் புகைப்படத்தை வைக்கலாம் என்று அரசாணை உள்ளது.
அதன்படி அரசு அலுவலகங்களில் தற்போது உள்ள பிரதமர் மோடி அவர்களின் புகைப்படத்தை வைக்க வேண்டும் என்று பாஜகவினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மோடி அவர்களின் புகைப்படத்துடன் வந்திருந்தனர்.
அப்போது, மாவட்ட ஆட்சியர் ஆலோசனைக் கூட்டத்தில் இருந்ததால் மாவட்ட ஆட்சியரை சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் பாஜகவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட முயன்றனர் ஆனால், அவர்களை காவல்துறையினர் தடுத்ததால் பாஜகவினர் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தி காவல்துறையினர் அவர்களை அனுப்பி வைத்தனர். இதனால் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.