திருப்பூரில் தூய்மை பணியாளர்களுக்கு அரசு அறிவித்த சிறப்பு ஊதியம் வழங்க வலியுறுத்தி சுகாதார பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்!

திருப்பூர்: தூய்மை பணியாளர்களுக்கு அரசு அறிவித்த சிறப்பு ஊதியம் வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டி திருப்பூரில் சுகாதார பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


திருப்பூர்: தூய்மை பணியாளர்களுக்கு அரசு அறிவித்த சிறப்பு ஊதியம் வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டி திருப்பூரில் சுகாதார பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் கொரானா காலத்தில் தூய்மை பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

ஆனால் இதுவரை சிறப்பு ஊதியம் வழங்கப்படவில்லை எனவும், அதேபோல் மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியம் வழங்க மாநகராட்சி மறுத்து வருவதாகவும் உடனடியாக மாவட்ட நிர்வாகம் அறிவித்த குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும், தூய்மை பணியாளர்களுக்கு பிடித்தம் செய்யப்படும் பணத்தினை திரும்ப வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் கருவம் பாளையம் பகுதியில் உள்ள சுகாதார அலுவலகம் முன்பாக ஏஐடியூசி சுகாதார பணியாளர் சங்கம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Newsletter

பிட்காயின் டிரேடிங் மூலம் ரூ.27.45 லட்சம் மோசடி, 5 பேர் கைது - கோவை சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

பிட்காயின் மற்றும் ஆன்லைன் டிரேடிங் பெயரில் ரூ.27.45 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஐந்து பேரை கோவை மாநகர சைபர் கிரை...

கோவை அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து; பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் சேதம்

கோவை அருகே சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் பிளாஸ்டிக் குடோனில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், பிளாஸ்டிக் பொருட்...

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...