கோவை: நடிகர் விஜய்சேதுபதியின் மகளுக்கு பாலியல் கொலை மிரட்டல் விடுத்த நபரை கைது செய்ய வலியுறுத்தி மாதர் சங்கத்தினர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர்.
கோவை: நடிகர் விஜய்சேதுபதியின் மகளுக்கு பாலியல் கொலை மிரட்டல் விடுத்த நபரை கைது செய்ய வலியுறுத்தி மாதர் சங்கத்தினர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர்.

இதுகுறித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அளித்த புகார் மனுவில் தெரிவித்திருப்பதாவது:
தமிழகத்தில் சமீபகாலங்களாக சமூக வலைதளங்களில் ஊடகவியலாளர்கள், திரைக்கலைஞர்கள், செயல்பாட்டாளர்கள் ஆகியோர் மீது குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்படுகிறது. புகார்கள் அளிக்கப்பட்டாலும் சமூக விரோதிகள் சிலர் இச்செயல்களை அச்சமின்றி தொடர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், பிரபல திரைப்பட கலைஞர் விஜய்சேதுபதி இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை குறித்த 800 என்ற திரைப்படத்தில் நடிக்கக்கூடாது என பதிவிட்டு மீறி அந்த படத்தில் நடித்தால் மகளை பாலியல் படுகொலை செய்வோம் என பகிங்கிரமாக சமூக வலைத்தளத்தில் மர்ம நபர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் பெண்கள், சிறுமிகள், குழந்தைகள் மீதான வன்கொடுமை அதிகரித்து வரும் நிலையில், இதுபோன்ற மிரட்டல் பதிவுகளை வெளியிடுவதாகவும் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி புகார் மனு அளித்தனர்.
இதுகுறித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அளித்த புகார் மனுவில் தெரிவித்திருப்பதாவது:
தமிழகத்தில் சமீபகாலங்களாக சமூக வலைதளங்களில் ஊடகவியலாளர்கள், திரைக்கலைஞர்கள், செயல்பாட்டாளர்கள் ஆகியோர் மீது குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்படுகிறது. புகார்கள் அளிக்கப்பட்டாலும் சமூக விரோதிகள் சிலர் இச்செயல்களை அச்சமின்றி தொடர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், பிரபல திரைப்பட கலைஞர் விஜய்சேதுபதி இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை குறித்த 800 என்ற திரைப்படத்தில் நடிக்கக்கூடாது என பதிவிட்டு மீறி அந்த படத்தில் நடித்தால் மகளை பாலியல் படுகொலை செய்வோம் என பகிங்கிரமாக சமூக வலைத்தளத்தில் மர்ம நபர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் பெண்கள், சிறுமிகள், குழந்தைகள் மீதான வன்கொடுமை அதிகரித்து வரும் நிலையில், இதுபோன்ற மிரட்டல் பதிவுகளை வெளியிடுவதாகவும் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி புகார் மனு அளித்தனர்.