ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில் நடைபெற்றது. உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து 600 முன்னாள் மாணவர்கள் பங்கேற்று சாதனைகளை கொண்டாடி, தாய் நிறுவனத்துடனான உறவை வலுப்படுத்தினர்.


Coimbatore: ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி (SREC) முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு (Second Global Alumni Meet) கோவை அருகே உள்ள ஆனைக்கட்டியில் சிறப்பாக நடைபெற்றது. உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்வேறு ஆண்டுகளில் பட்டம் பெற்ற சுமார் 600 முன்னாள் மாணவர்கள் இந்நிகழ்வில் ஆர்வமுடன் பங்கேற்றனர். முன்னாள் மாணவர்கள் மீண்டும் ஒன்றிணைவதற்கும், அவர்களின் சாதனைகளை கொண்டாடுவதற்கும், தாய் கல்வி நிறுவனத்துடனான வாழ்நாள் உறவை மேலும் வலுப்படுத்துவதற்குமான சிறந்த தளமாக இந்நிகழ்வு அமைந்தது.

நிகழ்ச்சிக்கு ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் தலைவர் வீணா ரமேஷ் வரவேற்புரை வழங்கினார். நிகழ்ச்சிக்கு SNR சன்ஸ் அறக்கட்டளையின் இணை நிர்வாக அறங்காவலர் நரேந்திரன் தலைமை வகித்தார். அவர், ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி கடந்த ஆண்டுகளில் கல்வி, ஆராய்ச்சி மற்றும் தொழில்துறை இணைப்புகளில் பெற்றுள்ள குறிப்பிடத்தக்க வளர்ச்சி மற்றும் சாதனைகளை எடுத்துரைத்தார். கல்லூரி மற்றும் மாணவர்களின் உயர்த்துவதில் முன்னாள் மாணவர்கள் ஆற்றிவரும் பங்களிப்பையும் பாராட்டினார்.


ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முதல்வரும், முன்னாள் மாணவர் சங்கத்தின் புரவலருமான Dr. அ. சௌந்தரராஜன், SNR சன்ஸ் அறக்கட்டளையின் தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமார் மற்றும் TechGuard நிறுவனத்தின் வணிக மேம்பாடு மற்றும் கூட்டாண்மைத் துறைத் தலைவர் மார்க் மெலமேட் ஆகியோர் சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக Spotlight என்ற முன்னாள் மாணவர் இதழ் வெளியிடப்பட்டது. இந்த இதழில் உலகம் முழுவதும் பணியாற்றி வரும் SREC முன்னாள் மாணவர்களின் சாதனைகள், வெற்றிக் கதைகள் மற்றும் இனிய நினைவுகள் இடம்பெற்றிருந்தன.


இதனைத் தொடர்ந்து நடைபெற்ற முன்னாள் மாணவர் உரையரங்கில், பல்வேறு ஆண்டுகளில் பட்டம் பெற்ற முன்னாள் மாணவர்கள் தங்களது தொழில்வாழ்க்கைப் பயணம், கல்லூரி கால அனுபவங்கள் மற்றும் மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். நிகழ்ச்சியின் மற்றொரு சிறப்பம்சமாக, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (R&D), கல்வி, தொழில்துறை ஒத்துழைப்பு, தொழில்முனைவோர் மேம்பாடு, மாணவர் வழிகாட்டுதல் மற்றும் கல்லூரி வளர்ச்சிக்கு சிறப்பான பங்களிப்பு செய்த முன்னாள் மாணவர்களுக்கு Alumni Excellence Awards வழங்கப்பட்டன.


நிகழ்ச்சியின் நிறைவாக, ஏற்பாட்டுக் குழுத் தலைவரான பேராசிரியர் Dr. வி. கற்பகம் நன்றியுரை வழங்கினார்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...