நடிகர் விஜய்சேதுபதி மகளுக்கு மிரட்டல் விடுத்த நபரை கைது செய்ய வலியுறுத்தி மாதர் சங்கத்தினர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார்!

கோவை: நடிகர் விஜய்சேதுபதியின் மகளுக்கு பாலியல் கொலை மிரட்டல் விடுத்த நபரை கைது செய்ய வலியுறுத்தி மாதர் சங்கத்தினர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர்.


கோவை: நடிகர் விஜய்சேதுபதியின் மகளுக்கு பாலியல் கொலை மிரட்டல் விடுத்த நபரை கைது செய்ய வலியுறுத்தி மாதர் சங்கத்தினர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர்.



இதுகுறித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அளித்த புகார் மனுவில் தெரிவித்திருப்பதாவது:

தமிழகத்தில் சமீபகாலங்களாக சமூக வலைதளங்களில் ஊடகவியலாளர்கள், திரைக்கலைஞர்கள், செயல்பாட்டாளர்கள் ஆகியோர் மீது குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்படுகிறது. புகார்கள் அளிக்கப்பட்டாலும் சமூக விரோதிகள் சிலர் இச்செயல்களை அச்சமின்றி தொடர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், பிரபல திரைப்பட கலைஞர் விஜய்சேதுபதி இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை குறித்த 800 என்ற திரைப்படத்தில் நடிக்கக்கூடாது என பதிவிட்டு மீறி அந்த படத்தில் நடித்தால் மகளை பாலியல் படுகொலை செய்வோம் என பகிங்கிரமாக சமூக வலைத்தளத்தில் மர்ம நபர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.



தமிழகத்தில் நாளுக்கு நாள் பெண்கள், சிறுமிகள், குழந்தைகள் மீதான வன்கொடுமை அதிகரித்து வரும் நிலையில், இதுபோன்ற மிரட்டல் பதிவுகளை வெளியிடுவதாகவும் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி புகார் மனு அளித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...