கோவை கீரணநத்தம் ஊராட்சிகளில் குட்டைகள், ஓடைகள் தூர்வாரும் பணிகள் துவக்கம்!

கோவை: சர்க்கார் சாமக்குளம் ஒன்றியம் கீரணத்தம் ஊராட்சியில் உள்ள சாம்பிராணி குட்டை, தடுப்பணை மற்றும் அதன் ஓடையை தூர்வாரி சீரமைக்கும் பணிகளுக்கு துவக்க பூஜை செய்து சிரவை ஆதினம் தவத்திரு. குமரகுருபர சுவாமிகள், கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் வி.சி.ஆறுக்குட்டி அவர்கள் மற்றும் கீரணத்தம் ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.பழனிச்சாமி அவர்கள் ஆகியோர் துவங்கி வைத்துள்ளனர்.


கோவை: சர்க்கார் சாமக்குளம் ஒன்றியம் கீரணத்தம் ஊராட்சியில் உள்ள சாம்பிராணி குட்டை, தடுப்பணை மற்றும் அதன் ஓடையை தூர்வாரி சீரமைக்கும் பணிகளுக்கு துவக்க பூஜை செய்து சிரவை ஆதினம் தவத்திரு. குமரகுருபர சுவாமிகள், கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் வி.சி.ஆறுக்குட்டி அவர்கள் மற்றும் கீரணத்தம் ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.பழனிச்சாமி அவர்கள் ஆகியோர் துவங்கி வைத்துள்ளனர்.



கீரணத்தம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொழில்நுட்ப பூங்காக்கள் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. அதையொட்டிள்ள அங்கு வாழும் மக்களும் கழிவு பொருட்களை நீர் வழித்தடங்கள் மற்றும் குட்டைகளில் கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

அதனால் சீரமைக்கப்படவுள்ள ஒடையின் முன்புறம் கம்பிவேலி அமைக்கப்படவுள்ளது. இதன் மூலம் ஓடையில் குப்பை கழிவுகள் கொட்டப்படுவது தவிர்க்கப்படும். மேலும், கீரணத்தம் பகுதியில் திடக்கழிவு மேலாண்மை பணிகளும் முன்னெடுக்கப்படவுள்ளது.

மாவட்ட நிர்வாகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் ஊராட்சி நிர்வாகம் அனுமதி அளித்ததை தொடர்ந்து, ராபர்ட் பாஷ் நிறுவன நிதி பங்களிப்பில், கௌசிகா நீர்கரங்கள் மற்றும் ராக் அமைப்பு உதவியுடன் கீரநத்தம் நீர்நிலைகள் பாதுகாப்பு அமைப்பு இந்த பணிகளை முன்னெடுக்கிறது.

கோவையில் மென்பொருள் நிறுவனங்களின் புகழிடமாக விளங்கும் கீரணத்தம் ஊராட்சியில் நீர்வளங்களை மேம்படுத்தி நிலத்தடி நீர் செறிவூட்டல் மற்றும் பசுமை பணிகளில் 56 வாரங்களுக்கு மேலாக கீரணத்தம் நீர்நிலைகள் பாதுகாப்பு அமைப்பினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக தற்போது சாம்பிராணி குட்டை, அதன் 1.5கி.மீ ஓடை மற்றும் தடுப்பணை சீரமைக்கப்படவுள்ளது. இவற்றின் மூலம் சுற்றுவட்டார மக்கள், பல்வேறு நிறுவனங்கள் மற்றும் வணிக வளாகங்கள் பயன்பெறும். கீரணத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட நீர்நிலைகளை அத்திக்கடவு அவினாசி நிலத்தடி நீர் செறிவூட்டல் இரண்டாம் திட்டத்தில் இணைக்க தொடர்ந்து முயற்சிகள் எடுக்கப்பட உள்ளதாக ஒருங்கிணைப்பாளர் குழு தெரிவித்துள்ளனர்.

Newsletter

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...