கோவை கீரணநத்தம் ஊராட்சிகளில் குட்டைகள், ஓடைகள் தூர்வாரும் பணிகள் துவக்கம்!

கோவை: சர்க்கார் சாமக்குளம் ஒன்றியம் கீரணத்தம் ஊராட்சியில் உள்ள சாம்பிராணி குட்டை, தடுப்பணை மற்றும் அதன் ஓடையை தூர்வாரி சீரமைக்கும் பணிகளுக்கு துவக்க பூஜை செய்து சிரவை ஆதினம் தவத்திரு. குமரகுருபர சுவாமிகள், கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் வி.சி.ஆறுக்குட்டி அவர்கள் மற்றும் கீரணத்தம் ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.பழனிச்சாமி அவர்கள் ஆகியோர் துவங்கி வைத்துள்ளனர்.


கோவை: சர்க்கார் சாமக்குளம் ஒன்றியம் கீரணத்தம் ஊராட்சியில் உள்ள சாம்பிராணி குட்டை, தடுப்பணை மற்றும் அதன் ஓடையை தூர்வாரி சீரமைக்கும் பணிகளுக்கு துவக்க பூஜை செய்து சிரவை ஆதினம் தவத்திரு. குமரகுருபர சுவாமிகள், கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் வி.சி.ஆறுக்குட்டி அவர்கள் மற்றும் கீரணத்தம் ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.பழனிச்சாமி அவர்கள் ஆகியோர் துவங்கி வைத்துள்ளனர்.



கீரணத்தம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொழில்நுட்ப பூங்காக்கள் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. அதையொட்டிள்ள அங்கு வாழும் மக்களும் கழிவு பொருட்களை நீர் வழித்தடங்கள் மற்றும் குட்டைகளில் கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

அதனால் சீரமைக்கப்படவுள்ள ஒடையின் முன்புறம் கம்பிவேலி அமைக்கப்படவுள்ளது. இதன் மூலம் ஓடையில் குப்பை கழிவுகள் கொட்டப்படுவது தவிர்க்கப்படும். மேலும், கீரணத்தம் பகுதியில் திடக்கழிவு மேலாண்மை பணிகளும் முன்னெடுக்கப்படவுள்ளது.

மாவட்ட நிர்வாகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் ஊராட்சி நிர்வாகம் அனுமதி அளித்ததை தொடர்ந்து, ராபர்ட் பாஷ் நிறுவன நிதி பங்களிப்பில், கௌசிகா நீர்கரங்கள் மற்றும் ராக் அமைப்பு உதவியுடன் கீரநத்தம் நீர்நிலைகள் பாதுகாப்பு அமைப்பு இந்த பணிகளை முன்னெடுக்கிறது.

கோவையில் மென்பொருள் நிறுவனங்களின் புகழிடமாக விளங்கும் கீரணத்தம் ஊராட்சியில் நீர்வளங்களை மேம்படுத்தி நிலத்தடி நீர் செறிவூட்டல் மற்றும் பசுமை பணிகளில் 56 வாரங்களுக்கு மேலாக கீரணத்தம் நீர்நிலைகள் பாதுகாப்பு அமைப்பினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக தற்போது சாம்பிராணி குட்டை, அதன் 1.5கி.மீ ஓடை மற்றும் தடுப்பணை சீரமைக்கப்படவுள்ளது. இவற்றின் மூலம் சுற்றுவட்டார மக்கள், பல்வேறு நிறுவனங்கள் மற்றும் வணிக வளாகங்கள் பயன்பெறும். கீரணத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட நீர்நிலைகளை அத்திக்கடவு அவினாசி நிலத்தடி நீர் செறிவூட்டல் இரண்டாம் திட்டத்தில் இணைக்க தொடர்ந்து முயற்சிகள் எடுக்கப்பட உள்ளதாக ஒருங்கிணைப்பாளர் குழு தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...