கோவை: ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நேற்று நடந்த ஏலத்தில், கடந்த வாரத்தை விட கொப்பரை வரத்து அதிகரித்து காணப்பட்டது. நேற்று, நடைபெற்ற ஏலத்தை, கோவை விற்பனை குழு முதுநிலை செயலர் கெளசல்யா மோகன் ஆய்வு செய்தார்.
கோவை: ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நேற்று நடந்த ஏலத்தில், கடந்த வாரத்தை விட கொப்பரை வரத்து அதிகரித்து காணப்பட்டது. நேற்று, நடைபெற்ற ஏலத்தை, கோவை விற்பனை குழு முதுநிலை செயலர் கெளசல்யா மோகன் ஆய்வு செய்தார்.
இது குறித்து விற்பனைக்கூட கண்காணிப்பாளர், மணிவாசகம் கூறும்போது: ஆனைமலை சுற்று வட்டாரப் பகுதியை சேர்ந்த விவசாயிகள், 490 மூட்டை கொப்பரைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். வியாபாரிகள் முன்னிலையில் அவற்றை தரம் பிரித்து அதிகாரிகள் ஏலமிட்டனர்.
முதல் தர கொப்பரை 265 மூட்டைகள் குவிண்டாலுக்கு குறைந்தபட்சம் ரூ.10,680 -க்கும், அதிகபட்சம் ரூ. 11,630 -க்கும் விற்பனையானது. 2-ம் தர கொப்பரை 225 மூட்டைகள், குவிண்டாலுக்கு அதிகபட்சம் ரூ. 9,015 -க்கும், குறைந்தபட்சம் ரூ. 6,550 -க்கும் விற்பனையானது. 11 வியாபாரிகள், 74 விவசாயிகள் ஏலத்தில் பங்கேற்றனர். கடந்த வாரத்தை விட 50 மூட்டைகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. மொத்தம் 235 குவிண்டால் ரூ. 20 லட்சத்துக்கு ஏலமிடப்பட்டது, என்றார்.
இது குறித்து விற்பனைக்கூட கண்காணிப்பாளர், மணிவாசகம் கூறும்போது: ஆனைமலை சுற்று வட்டாரப் பகுதியை சேர்ந்த விவசாயிகள், 490 மூட்டை கொப்பரைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். வியாபாரிகள் முன்னிலையில் அவற்றை தரம் பிரித்து அதிகாரிகள் ஏலமிட்டனர்.
முதல் தர கொப்பரை 265 மூட்டைகள் குவிண்டாலுக்கு குறைந்தபட்சம் ரூ.10,680 -க்கும், அதிகபட்சம் ரூ. 11,630 -க்கும் விற்பனையானது. 2-ம் தர கொப்பரை 225 மூட்டைகள், குவிண்டாலுக்கு அதிகபட்சம் ரூ. 9,015 -க்கும், குறைந்தபட்சம் ரூ. 6,550 -க்கும் விற்பனையானது. 11 வியாபாரிகள், 74 விவசாயிகள் ஏலத்தில் பங்கேற்றனர். கடந்த வாரத்தை விட 50 மூட்டைகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. மொத்தம் 235 குவிண்டால் ரூ. 20 லட்சத்துக்கு ஏலமிடப்பட்டது, என்றார்.