ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கடந்த வாரத்தை விட கொப்பரை வரத்து அதிகரிப்பு..!

கோவை: ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நேற்று நடந்த ஏலத்தில், கடந்த வாரத்தை விட கொப்பரை வரத்து அதிகரித்து காணப்பட்டது. நேற்று, நடைபெற்ற ஏலத்தை, கோவை விற்பனை குழு முதுநிலை செயலர் கெளசல்யா மோகன் ஆய்வு செய்தார்.


கோவை: ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நேற்று நடந்த ஏலத்தில், கடந்த வாரத்தை விட கொப்பரை வரத்து அதிகரித்து காணப்பட்டது. நேற்று, நடைபெற்ற ஏலத்தை, கோவை விற்பனை குழு முதுநிலை செயலர் கெளசல்யா மோகன் ஆய்வு செய்தார்.

இது குறித்து விற்பனைக்கூட கண்காணிப்பாளர், மணிவாசகம் கூறும்போது: ஆனைமலை சுற்று வட்டாரப் பகுதியை சேர்ந்த விவசாயிகள், 490 மூட்டை கொப்பரைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். வியாபாரிகள் முன்னிலையில் அவற்றை தரம் பிரித்து அதிகாரிகள் ஏலமிட்டனர்.

முதல் தர கொப்பரை 265 மூட்டைகள் குவிண்டாலுக்கு குறைந்தபட்சம் ரூ.10,680 -க்கும், அதிகபட்சம் ரூ. 11,630 -க்கும் விற்பனையானது. 2-ம் தர கொப்பரை 225 மூட்டைகள், குவிண்டாலுக்கு அதிகபட்சம் ரூ. 9,015 -க்கும், குறைந்தபட்சம் ரூ. 6,550 -க்கும் விற்பனையானது. 11 வியாபாரிகள், 74 விவசாயிகள் ஏலத்தில் பங்கேற்றனர். கடந்த வாரத்தை விட 50 மூட்டைகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. மொத்தம் 235 குவிண்டால் ரூ. 20 லட்சத்துக்கு ஏலமிடப்பட்டது, என்றார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...