கோவை: கோவை மதுக்கரை அருகே 11 மாத பெண் குழந்தையை தனியாக விட்டு சென்ற இளம்பெண் மாயம் அடைந்த நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: கோவை மதுக்கரை அருகே 11 மாத பெண் குழந்தையை தனியாக விட்டுச் சென்ற இளம்பெண் மாயம் அடைந்த நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மதுக்கரை அறிவொளி நகர் பகுதியை சேர்ந்த மனோஜ் கிரேசி தம்பதியினரின் மகள் சைனி(20). இவருக்கு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மணிகண்டன் என்பவருடன் திருமணமாகி 11 மாத பெண் குழந்தை ஒன்று உள்ளது.
இந்நிலையில், நேற்று மாலை 6 மணியளவில் சைனி தனது தாயாரிடம் கோவைபுதூர் பகுதியில் உள்ள தேவாலத்திற்கு பிரார்த்தனை செய்ய செல்வதாக கூறி சென்றுள்ளார். வெகு நேரமாகியும் மகள் வீடு திரும்பாததால் சைனியை பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர்.
இதையடுத்து, அவரை கண்டு பிடிக்க முடியாததின் காரணமாக மதுக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள மதுக்கரை போலீசார் இருபது வயதேயான இளம்பெண் சைனியை தேடி வருகின்றனர்.
கோவை மதுக்கரை அறிவொளி நகர் பகுதியை சேர்ந்த மனோஜ் கிரேசி தம்பதியினரின் மகள் சைனி(20). இவருக்கு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மணிகண்டன் என்பவருடன் திருமணமாகி 11 மாத பெண் குழந்தை ஒன்று உள்ளது.
இந்நிலையில், நேற்று மாலை 6 மணியளவில் சைனி தனது தாயாரிடம் கோவைபுதூர் பகுதியில் உள்ள தேவாலத்திற்கு பிரார்த்தனை செய்ய செல்வதாக கூறி சென்றுள்ளார். வெகு நேரமாகியும் மகள் வீடு திரும்பாததால் சைனியை பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர்.
இதையடுத்து, அவரை கண்டு பிடிக்க முடியாததின் காரணமாக மதுக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள மதுக்கரை போலீசார் இருபது வயதேயான இளம்பெண் சைனியை தேடி வருகின்றனர்.