கோவை: பொள்ளாச்சி அருகே நெல்லித்துறை - மன்னம் மலைவாழ் மக்கள் குடியிருப்புப் பகுதிகளுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தி தர கோரி பொள்ளாச்சி சார் ஆட்சியரிடம் மலைவாழ் மக்கள், இன்று மனு அளித்தனர்.
கோவை: பொள்ளாச்சி அருகே நெல்லித்துறை - மன்னம் மலைவாழ் மக்கள் குடியிருப்புப் பகுதிகளுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தி தர கோரி பொள்ளாச்சி சார் ஆட்சியரிடம் மலைவாழ் மக்கள், இன்று மனு அளித்தனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை நெல்லித்துறை - மன்னம் மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதியில் 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாரம்பரியமாக வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் இதுவரை குடிநீர் வசதி ஏற்படுத்தி தராததால், ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, அந்த நீரையே குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர்.
சுகாதாரமற்ற நீரை குடிப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, பல்வேறு தொற்று நோய்கள் ஏற்பட்டு அவதிப்பட்டு வருவதாகவும், தண்ணீர் மாசு அடைந்து வருவதால் சமைக்கக் கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது, என அம்மக்கள் தெரிவித்தனர்.
மேலும், குடிநீருக்காக மூன்று கிலோமீட்டர் சென்று ஆழியாறு ஆற்றங்கரையில் உள்ள நீரை கொண்டு வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும், இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை, என்று மலைவாழ் மக்கள் தெரிவித்தனர்.
இனியாவது, தங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையில் பாதிக்கப்பட்ட மலைவாழ் மக்கள், பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் வைத்தியநாதனை சந்தித்து மனு அளித்துள்ளனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை நெல்லித்துறை - மன்னம் மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதியில் 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாரம்பரியமாக வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் இதுவரை குடிநீர் வசதி ஏற்படுத்தி தராததால், ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, அந்த நீரையே குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர்.
சுகாதாரமற்ற நீரை குடிப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, பல்வேறு தொற்று நோய்கள் ஏற்பட்டு அவதிப்பட்டு வருவதாகவும், தண்ணீர் மாசு அடைந்து வருவதால் சமைக்கக் கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது, என அம்மக்கள் தெரிவித்தனர்.
மேலும், குடிநீருக்காக மூன்று கிலோமீட்டர் சென்று ஆழியாறு ஆற்றங்கரையில் உள்ள நீரை கொண்டு வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும், இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை, என்று மலைவாழ் மக்கள் தெரிவித்தனர்.
இனியாவது, தங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையில் பாதிக்கப்பட்ட மலைவாழ் மக்கள், பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் வைத்தியநாதனை சந்தித்து மனு அளித்துள்ளனர்.