திருப்பூர்: திருமூர்த்தி மலையில் சுற்றுலா பயணிகளை மேலும் கவரும் வகையில் நீச்சல் குளம் பகுதியின் அருகே சுற்றுலா துறையின் சார்பாக புதியதாக சுற்றுச்சூழல் பூங்கா அமைக்க மாவட்ட சுற்றுலா அதிகாரி அரவிந்த் குமார் தலைமையில் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
திருப்பூர்: திருமூர்த்தி மலையில் சுற்றுலா பயணிகளை மேலும் கவரும் வகையில் நீச்சல் குளம் பகுதியின் அருகே சுற்றுலா துறையின் சார்பாக புதியதாக சுற்றுச்சூழல் பூங்கா அமைக்க மாவட்ட சுற்றுலா அதிகாரி அரவிந்த் குமார் தலைமையில் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை அருகே மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் திருமூர்த்தி மலை அமைந்துள்ளது. மலைமேல் 960 மீட்டர் உயரத்தில் மூலிகை குணம் நிறைந்த பஞ்சலிங்கம் அருவி அமைந்துள்ளது.
மலையடிவாரத்தில் பாலாற்றின் கரையில் சிவன் விஷ்ணு பிரம்மா ஆகிய மும்மூர்த்திகள் அடங்கிய திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில், திருமூர்த்திமலை அணை பூங்கா, படகு இல்லம், நீச்சல் குளம், வண்ணமீன் காட்சியகம், விளையாட்டுப் பூங்கா என பல்வேறு அம்சங்கள் உள்ளன.
இந்நிலையில், சுற்றுலா பயணிகளை மேலும் கவரும் வகையில் ஊரக வளர்ச்சித் துறையின் கட்டுப்பாட்டில் ஏற்கனவே உள்ள நீச்சல் குளம் பகுதியின் அருகே சுற்றுலா துறையின் சார்பாக புதியதாக சுற்றுச்சூழல் பூங்கா அமைக்க மாவட்ட சுற்றுலா அதிகாரி அரவிந்த் குமார் தலைமையில் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
திருமூர்த்திமலை நீச்சல் குளம் பகுதிக்கு விடுமுறை நாட்களிலும் சாதாரண நாட்களிலும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குடும்பத்துடன் வந்து குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில், இதற்கு அருகே இரண்டு ஏக்கர் நிலத்தில் புதியதாக சுற்றுச்சூழல் பூங்கா அமைக்க ஊரக வளர்ச்சித்துறை விருப்பம் தெரிவித்திருந்தது. எனவே அந்த இடத்தில் புதியதாக சுற்றுச்சூழல் பூங்கா அமைப்பதற்கான சாத்தியக் கூறுகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின் போது, மாவட்ட உதவி சுற்றுலா அலுவலர்கள் செல்வராஜ், சதீஷ்குமார் மற்றும் சுற்றுலா ஆர்வலர்கள் சிரில் ரூபஸ், ஜவஹர் ஆகியோர் உடனிருந்தனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை அருகே மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் திருமூர்த்தி மலை அமைந்துள்ளது. மலைமேல் 960 மீட்டர் உயரத்தில் மூலிகை குணம் நிறைந்த பஞ்சலிங்கம் அருவி அமைந்துள்ளது.
மலையடிவாரத்தில் பாலாற்றின் கரையில் சிவன் விஷ்ணு பிரம்மா ஆகிய மும்மூர்த்திகள் அடங்கிய திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில், திருமூர்த்திமலை அணை பூங்கா, படகு இல்லம், நீச்சல் குளம், வண்ணமீன் காட்சியகம், விளையாட்டுப் பூங்கா என பல்வேறு அம்சங்கள் உள்ளன.
இந்நிலையில், சுற்றுலா பயணிகளை மேலும் கவரும் வகையில் ஊரக வளர்ச்சித் துறையின் கட்டுப்பாட்டில் ஏற்கனவே உள்ள நீச்சல் குளம் பகுதியின் அருகே சுற்றுலா துறையின் சார்பாக புதியதாக சுற்றுச்சூழல் பூங்கா அமைக்க மாவட்ட சுற்றுலா அதிகாரி அரவிந்த் குமார் தலைமையில் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
திருமூர்த்திமலை நீச்சல் குளம் பகுதிக்கு விடுமுறை நாட்களிலும் சாதாரண நாட்களிலும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குடும்பத்துடன் வந்து குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில், இதற்கு அருகே இரண்டு ஏக்கர் நிலத்தில் புதியதாக சுற்றுச்சூழல் பூங்கா அமைக்க ஊரக வளர்ச்சித்துறை விருப்பம் தெரிவித்திருந்தது. எனவே அந்த இடத்தில் புதியதாக சுற்றுச்சூழல் பூங்கா அமைப்பதற்கான சாத்தியக் கூறுகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின் போது, மாவட்ட உதவி சுற்றுலா அலுவலர்கள் செல்வராஜ், சதீஷ்குமார் மற்றும் சுற்றுலா ஆர்வலர்கள் சிரில் ரூபஸ், ஜவஹர் ஆகியோர் உடனிருந்தனர்.