திருப்பூர்: திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் அமைய உள்ள டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள், விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகையிட்டு மனு அளித்தனர்.
திருப்பூர்: திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் அமைய உள்ள டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள், விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகையிட்டு மனு அளித்தனர்.
திருப்பூரை அடுத்த கணியாம்பூண்டி ஊராட்சிக்குட்பட்ட ஆத்துமேட்டுப்பகுதியில் இரண்டு தலைமுறைகளாக 300க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த பொது மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், தனியாருக்கு சொந்தமான இடத்தில் மதுபானக்கடை வருவதாக கூறப்படுகிறது. மேலும் மதுக்கடை அமைய உள்ள இடம் விவசாய பூமியாக உள்ள நிலையில், மதுக்கடை அமையும் பட்சத்தில் இப்பகுதியில் உள்ள 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்வது கேள்விக்குறியாக மாறுவதோடு, சமூக விரோதிகள் ஊடுருவ வாய்ப்பாக அமையும் என்பதால், விவசாய மக்களையும், பொது மக்களையும் பாதுகாக்கும் விதமாக இப்பகுதியில் அமைய உள்ள மதுக்கடைக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று கூறி மனு அளித்தனர்.
திருப்பூரை அடுத்த கணியாம்பூண்டி ஊராட்சிக்குட்பட்ட ஆத்துமேட்டுப்பகுதியில் இரண்டு தலைமுறைகளாக 300க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த பொது மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், தனியாருக்கு சொந்தமான இடத்தில் மதுபானக்கடை வருவதாக கூறப்படுகிறது. மேலும் மதுக்கடை அமைய உள்ள இடம் விவசாய பூமியாக உள்ள நிலையில், மதுக்கடை அமையும் பட்சத்தில் இப்பகுதியில் உள்ள 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்வது கேள்விக்குறியாக மாறுவதோடு, சமூக விரோதிகள் ஊடுருவ வாய்ப்பாக அமையும் என்பதால், விவசாய மக்களையும், பொது மக்களையும் பாதுகாக்கும் விதமாக இப்பகுதியில் அமைய உள்ள மதுக்கடைக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று கூறி மனு அளித்தனர்.