கோவையில் அண்ணா பல்கலைக்கழகத்தை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் திமுகவினர் போலீசாரிடையே தள்ளுமுள்ளு!

கோவை: கோவையில் அண்ணா பல்கலைக்கழகத்தை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் திமுகவினர் போலீசாரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.



கோவை: கோவையில் அண்ணா பல்கலைக்கழகத்தை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் திமுகவினர் போலீசாரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை பதவி விலக வலியுறுத்தி, திமுக இளைஞரணி சார்பில், தமிழகம் முழுவதும், அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் முன்பும், பொறியியல் கல்லூரிகள் முன்பும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.



இதேபோல் கோவை ஜிசிடி பொறியியல் கல்லூரி முன்பு, மாநில இளைஞரணி துணைச்செயலாளர் பைந்தமிழ்பாரி தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. 

அப்போது, சூரப்பாவை டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தி கோஷமிட்டபடி கையில் பதாகைகளை ஏந்தியவாறு கல்லூரியை முற்றுகையிட முயன்றனர். அப்போது, காவல்துறையினர் தடுப்புகளை ஏற்படுத்தி இருந்ததை தாண்டி செல்ல முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். 



இதனால் காவல்துறை மற்றும் திமுகவினர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் பிடித்து இழுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த முற்றுகை ஆர்ப்பாட்டத்தில் கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள் கோட்டை அப்பாஸ், இளங்கோ, சபரி கார்த்திகேயன், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 



இதனையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 250க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

Newsletter

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் கோரி கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

பணி நிரந்தரம், அரசு ஊழியர்களுக்கு இணையான காலமுறை ஊதியம், ஓய்வு வயது உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டாஸ...

பிட்காயின் டிரேடிங் மூலம் ரூ.27.45 லட்சம் மோசடி, 5 பேர் கைது - கோவை சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

பிட்காயின் மற்றும் ஆன்லைன் டிரேடிங் பெயரில் ரூ.27.45 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஐந்து பேரை கோவை மாநகர சைபர் கிரை...

கோவை அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து; பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் சேதம்

கோவை அருகே சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் பிளாஸ்டிக் குடோனில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், பிளாஸ்டிக் பொருட்...

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...