நீலகிரி: கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் சாட்சிகளை விசாரித்த நீதிபதி வழக்கை வரும் மாதம் 16ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
நீலகிரி: கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் சாட்சிகளை விசாரித்த நீதிபதி வழக்கை வரும் மாதம் 16ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கில் சயான், மனோஜ், உதயன், மனோஜ் சாமி, ஜித்தின் ஜாய், பிஜின் குட்டி, ஜம்சீர் அலி, தீபு, சதீசன் மற்றும் சந்தோஷ்சாமி ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கின் விசாரணை உதகை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு சயான், மனோஜ், உதயன், மனோஜ் சாமி, ஜித்தின் ஜாய், பிஜின் குட்டி, ஜம்சீர் அலி, தீபு, சதீசன் மற்றும் சந்தோஷ்சமி ஆகிய 10 பேரும் ஆஜராயினர்.
அப்போது, மருத்துவர் வாசன், அதிமுக பிரமுகர் அனுபவ் ரவி, சிசிடிவி காட்சிகள் ஆய்வாளர் ராஜூ மற்றும் ஆய்வாளர் சதாம் உசேன் ஆகியோர் சாட்சியளித்தனர்.
அதிமுக பிரமுகர் அனுபவ் ரவி சாட்சி அளித்த போது, இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய நபரான இறந்த கனகராஜ், 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29-ம் தேதி தன்னிடம் தொலைபேசியில் பேசியதாக கூறினார். இதற்கு குற்றம்சாட்டப்பட்டவர்களின் வழக்கறிஞர் ஆனந்த் கடும் ஆட்சேபனை தெரிவித்தார்.
2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28-ம் தேதி கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார் என கூறி, கனகராஜின் இறப்பு சான்றிதழை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.
இது குறித்து நீதிபதி பி.வடமலை, அனுபவ ரவியிடம் விளக்கம் கேட்ட போது, தான் தவறுதலாக கூறி விட்டதாக கூறினார். இதனால், நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, வழக்கு விசாரணையை இம்மாதம் 16-ம் தேதிக்கு நீதிபதி பி.வடமலை ஒத்திவைத்தார்.
நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கில் சயான், மனோஜ், உதயன், மனோஜ் சாமி, ஜித்தின் ஜாய், பிஜின் குட்டி, ஜம்சீர் அலி, தீபு, சதீசன் மற்றும் சந்தோஷ்சாமி ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கின் விசாரணை உதகை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு சயான், மனோஜ், உதயன், மனோஜ் சாமி, ஜித்தின் ஜாய், பிஜின் குட்டி, ஜம்சீர் அலி, தீபு, சதீசன் மற்றும் சந்தோஷ்சமி ஆகிய 10 பேரும் ஆஜராயினர்.
அப்போது, மருத்துவர் வாசன், அதிமுக பிரமுகர் அனுபவ் ரவி, சிசிடிவி காட்சிகள் ஆய்வாளர் ராஜூ மற்றும் ஆய்வாளர் சதாம் உசேன் ஆகியோர் சாட்சியளித்தனர்.
அதிமுக பிரமுகர் அனுபவ் ரவி சாட்சி அளித்த போது, இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய நபரான இறந்த கனகராஜ், 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29-ம் தேதி தன்னிடம் தொலைபேசியில் பேசியதாக கூறினார். இதற்கு குற்றம்சாட்டப்பட்டவர்களின் வழக்கறிஞர் ஆனந்த் கடும் ஆட்சேபனை தெரிவித்தார்.
2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28-ம் தேதி கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார் என கூறி, கனகராஜின் இறப்பு சான்றிதழை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.
இது குறித்து நீதிபதி பி.வடமலை, அனுபவ ரவியிடம் விளக்கம் கேட்ட போது, தான் தவறுதலாக கூறி விட்டதாக கூறினார். இதனால், நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, வழக்கு விசாரணையை இம்மாதம் 16-ம் தேதிக்கு நீதிபதி பி.வடமலை ஒத்திவைத்தார்.