கோவை: திருச்சி மாவட்டம், முசிறி பகுதியை சேர்ந்த கருணா என்பவர் குணசேகரன் (24). இவர் கோவை ஈச்சனாரி பகுதியில் தங்கி கட்டிட வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், நேற்று கிடைக்க பெற்ற சம்பள பணத்தை கொண்டு புதிய செல்போன் ஒன்றை வாங்கியுள்ளார்.
கோவை: திருச்சி மாவட்டம், முசிறி பகுதியை சேர்ந்த கருணா என்பவர் குணசேகரன் (24). இவர் கோவை ஈச்சனாரி பகுதியில் தங்கி கட்டிட வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், நேற்று கிடைக்க பெற்ற சம்பள பணத்தை கொண்டு புதிய செல்போன் ஒன்றை வாங்கியுள்ளார்.
பின்னர், ஈச்சனாரி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க சென்றுள்ளார். அப்போது, அங்கிருந்த இரண்டு வாலிபர்கள், குணசேகரனிடம் மது அருந்த பணம் தருமாறு கேட்டு உள்ளனர்.
அதற்கு, குணசேகரன் பணம் தர மறுத்ததோடு, அங்கிருந்து வெளியேற முயற்சித்து உள்ளார். அப்போது, அவரை துரத்தி வந்த இந்த இரண்டு வாலிபர்கள், குணசேகரனை பிடிக்குமாறு எதிரே வந்த நண்பர்களிடம் கூறியுள்ளனர்.
பின்னர், அவர்கள் கத்தியால் குத்திவிட்டு, குணசேகரனிடமிருந்து இருந்து செல்ஃபோன் மற்றும் 2000 ரூபாய் பணத்தை பறித்தவர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இது குறித்து, அப்பகுதியில் உள்ளவர்கள் போத்தனூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததை, தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடந்த குணசேகரனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து, காவல் ஆய்வாளர் சிவகுமார் தலைமையில் போலீசார் கத்தி குத்து சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபர்களை தேடி வந்த நிலையில், ஈச்சனாரி பகுதியில் பதுங்கி இருந்த 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர்கள் ஈச்சனாரி பகுதியை சேர்ந்த பிரவீன் (20),போத்தனூரை சேர்ந்த தென்னரசு (20),சீனிவாசா நகர் பகுதியை மகேஷ் ராஜ் (21) கணேசபுரம் பகுதியை சேர்ந்த ஹரிஹரன் மற்றும் சிவபாண்டி என்பது தெரியவந்தது. இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பின்னர், ஈச்சனாரி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க சென்றுள்ளார். அப்போது, அங்கிருந்த இரண்டு வாலிபர்கள், குணசேகரனிடம் மது அருந்த பணம் தருமாறு கேட்டு உள்ளனர்.
அதற்கு, குணசேகரன் பணம் தர மறுத்ததோடு, அங்கிருந்து வெளியேற முயற்சித்து உள்ளார். அப்போது, அவரை துரத்தி வந்த இந்த இரண்டு வாலிபர்கள், குணசேகரனை பிடிக்குமாறு எதிரே வந்த நண்பர்களிடம் கூறியுள்ளனர்.
பின்னர், அவர்கள் கத்தியால் குத்திவிட்டு, குணசேகரனிடமிருந்து இருந்து செல்ஃபோன் மற்றும் 2000 ரூபாய் பணத்தை பறித்தவர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இது குறித்து, அப்பகுதியில் உள்ளவர்கள் போத்தனூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததை, தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடந்த குணசேகரனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து, காவல் ஆய்வாளர் சிவகுமார் தலைமையில் போலீசார் கத்தி குத்து சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபர்களை தேடி வந்த நிலையில், ஈச்சனாரி பகுதியில் பதுங்கி இருந்த 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர்கள் ஈச்சனாரி பகுதியை சேர்ந்த பிரவீன் (20),போத்தனூரை சேர்ந்த தென்னரசு (20),சீனிவாசா நகர் பகுதியை மகேஷ் ராஜ் (21) கணேசபுரம் பகுதியை சேர்ந்த ஹரிஹரன் மற்றும் சிவபாண்டி என்பது தெரியவந்தது. இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.