பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் பெயரில் போலி மின்னஞ்சல் - யாரும் பயன்படுத்த வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் அறிவுரை!

நீலகிரி: பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் நிறுவனத்தில் பல பரிசுகள் காத்திருப்பதாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் பெயரில் போலி மின்னஞ்சல் மூலமாக அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு அனுப்பப்பட்டு வருவதாகவும் அதை யாரும் பயன்படுத்த வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


நீலகிரி: பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் நிறுவனத்தில் பல பரிசுகள் காத்திருப்பதாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் பெயரில் போலி மின்னஞ்சல் மூலமாக அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு அனுப்பப்பட்டு வருவதாகவும் அதை யாரும் பயன்படுத்த வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்ட ஆட்சியராக இன்னசென்ட் திவ்யா கடந்த 4 ஆண்டுகாலமாக பதவி வகித்து வருகிறார். இவர் பிளாஸ்டிக் இல்லா நீலகிரி, சுகாதாரம், அனைவருக்கும் கல்வி என பல திட்டங்களை மாவட்டத்தில் அமல்படுத்தி மக்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா பெயரில் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு பல பரிசுகளை வழங்க உள்ளது. எனவே, அதை கிளிக் செய்து பல பரிசுகளை வெல்லுங்கள், இப்படிக்கு மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா என்ற பெயரில் போலி மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. இச்சம்பவம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், இது குறித்து விளக்கம் அளிக்க பேட்டியளித்த மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, தன்னுடைய பெயரில் பிரபல நிறுவனத்தில் பரிசுத் தொகை மற்றும் பரிசுப் பொருட்களை பெற அனைவரும் கிளிக் செய்யுங்கள் என மின்னஞ்சல் மூலம் சில மர்ம நபர்களால் அனுப்பப்பட்டு வருகிறது. எனவே, அவ்வாறு வரும் மின்னஞ்சல்களை யாரும் பயன்படுத்த வேண்டாம் என வேண்டுகோள் விடுத்த மாவட்ட ஆட்சியர், இது குறித்து காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக கூறினார்.

மேலும், வடகிழக்கு பருவமழையின் போது குன்னூர் காேத்தகிரி பகுதியில் பாதிப்புகள் அதிகம் இருக்கும் என்பதால் இதனை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயாராக இருப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

Newsletter

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 15...

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் கோரி கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

பணி நிரந்தரம், அரசு ஊழியர்களுக்கு இணையான காலமுறை ஊதியம், ஓய்வு வயது உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டாஸ...

பிட்காயின் டிரேடிங் மூலம் ரூ.27.45 லட்சம் மோசடி, 5 பேர் கைது - கோவை சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

பிட்காயின் மற்றும் ஆன்லைன் டிரேடிங் பெயரில் ரூ.27.45 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஐந்து பேரை கோவை மாநகர சைபர் கிரை...

கோவை அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து; பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் சேதம்

கோவை அருகே சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் பிளாஸ்டிக் குடோனில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், பிளாஸ்டிக் பொருட்...

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...